India
பொருளாதார மந்தநிலை குறித்து சிவசேனா கேள்வி : மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ?
மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் பாஜக, சிவசேனா இடையில் கூட்டணி அரசு அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா இதழில் தலையங்கம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தி திரைப்படமான ஷோலேவில் வரும் “இத்தனை மவுனம் ஏன்?” என்ற வசனத்தை தலைப்பாக வைத்து தலையங்கத்தை வெளியிட்டுள்ளது சிவசேனாவின் சாம்னா.
அதில், “நாட்டின் பொருளாதாரம் குறித்து மத்திய அரசு ஏன் அதீத மவுனம் சாதிக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வர்த்தகத் துறையில் உள்ள அனைத்து பொருட்களின் விற்பனையும் 300 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக குறைந்துள்ளது.
ஆட்டோ மொபைல், உணவு உள்ளிட்ட பல துறைகளில் உற்பத்தி குறைந்ததால் பணியாட்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். வங்கிகளில் நிதி நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் இந்திய நிறுவனங்களை விடுத்து ஆன்லைன் மூலம் அந்நிய நாட்டினர் வர்த்தகம் செய்து இந்தியப் பணத்தை சம்பாதித்து வருகின்றன.
இது போன்ற விவகாரங்கள் அனைத்துக்கும் பணமதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையும் தான் காரணம் என சாடியுள்ள சிவசேனா, இவற்றில் மத்திய அரசு மவுனம் சாதிப்பது ஏன்? இதனைத் தவிர மோசமான நாட்கள் ஏதும் இந்திய தேசத்துக்கு வரப்போகிறதா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!