India
பொருளாதார மந்தநிலை குறித்து சிவசேனா கேள்வி : மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ?
மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் பாஜக, சிவசேனா இடையில் கூட்டணி அரசு அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா இதழில் தலையங்கம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தி திரைப்படமான ஷோலேவில் வரும் “இத்தனை மவுனம் ஏன்?” என்ற வசனத்தை தலைப்பாக வைத்து தலையங்கத்தை வெளியிட்டுள்ளது சிவசேனாவின் சாம்னா.
அதில், “நாட்டின் பொருளாதாரம் குறித்து மத்திய அரசு ஏன் அதீத மவுனம் சாதிக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வர்த்தகத் துறையில் உள்ள அனைத்து பொருட்களின் விற்பனையும் 300 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக குறைந்துள்ளது.
ஆட்டோ மொபைல், உணவு உள்ளிட்ட பல துறைகளில் உற்பத்தி குறைந்ததால் பணியாட்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். வங்கிகளில் நிதி நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் இந்திய நிறுவனங்களை விடுத்து ஆன்லைன் மூலம் அந்நிய நாட்டினர் வர்த்தகம் செய்து இந்தியப் பணத்தை சம்பாதித்து வருகின்றன.
இது போன்ற விவகாரங்கள் அனைத்துக்கும் பணமதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையும் தான் காரணம் என சாடியுள்ள சிவசேனா, இவற்றில் மத்திய அரசு மவுனம் சாதிப்பது ஏன்? இதனைத் தவிர மோசமான நாட்கள் ஏதும் இந்திய தேசத்துக்கு வரப்போகிறதா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!