India
தொடங்கியது வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: முடங்கியது வங்கி சேவை - பணப்பரிமாற்றம் செய்யமுடியாமல் மக்கள் தவிப்பு
வங்கிகள் இணைப்பு, வங்கிகள் தனியார்மயமாக்கலை எதிர்த்து இன்று (அக்டோபர் 22) அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த வங்கிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. வாராக்கடன் மட்டும் ஏறத்தாழ 3 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் வங்கிகள் இணைக்கும் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், வங்கிகள் இணைப்பைக் கைவிட்டு வாராக் கடனை வசூலிப்பதில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வங்கி ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை எதிர்த்தும், வங்கிகளை முழுக்க முழுக்க தனியார் மயமாக்கும் மத்திய பா.ஜ.க அரசின் இந்த செயலை கண்டித்தும் அகில இந்திய அளவில், அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இன்று (அக்டோபர் 22) நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி சமயத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பணப்பரிவர்த்தனை போன்ற பல்வேறு வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அவதியளிக்கக் கூடியதாக உள்ளது. அரசு, வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, மக்களுக்கு வங்கி சேவை வழங்க உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது தொடர்பாக சென்னை பாரிமுனை அருகே உள்ள நாயக் பவனில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம், “ 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றியமைத்து 6 வங்கிகளை மூடுவதால் எந்த நன்மையும் ஏற்பட்டு விடாது. இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழப்பதோடு, மக்கள் பணத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும்” என்றார்.
“வங்கிகளை இணைப்பதின் மூலம் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதுதான் மத்திய அரசின் அடுத்த திட்டம்” என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
Also Read
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
கன்னியாகுமரி to சென்னை.. 6 நாட்கள் மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம்... பிரமிக்க வைத்த 2 பெண்கள்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!