India
“மக்களைப் பிரித்தாள முயற்சிக்கும் பா.ஜ.கவின் சூழ்ச்சி வங்காளத்தில் பலிக்காது” : மம்தா பானர்ஜி ஆவேசம்!
மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது, இந்தியாவில் ஊடுருவியர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள், அதேவேளையில் இந்துக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்தால் அவர்களுக்கு குடியுரிமை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், தேசிய மக்கள் பதிவேடு குறித்து மம்தா பானர்ஜி தவறான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறார் என்று குற்றம்சாட்டினார். அமித்ஷாவிற்கு எதிராக ட்விட்டரில் அம்மாநில மக்கள் #GoBackAmitShah என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கினார்கள். மேலும் அமித்ஷாவின் பேச்சுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தெற்கு கொல்கத்தாவில் ஒரு நிகழ்விற்குச் சென்றிருந்தார் மம்தா பானர்ஜி. அப்போது அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு மம்தா பதில் அளித்துள்ளார். அதில், “மதவேறுபாடுகள் இன்றி, மேற்கு வங்கத்தில் மக்கள் ஒற்றுமையுடன் சமய நல்லிணக்கத்துடன் துர்கா பூஜை கொண்டாடுகின்றனர்.
இது தான் எங்கள் மாநிலம். எங்கள் மாநிலத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எங்களின் விருந்தோம்பலைப் பெறலாம். அதேவேளையில் மக்களைப் பிரித்தாளும் முயற்சியில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அது வங்காளத்தில் பலிக்காது” என்றார். மேலும், அமித்ஷாவை மறைமுகமாகச் சாடிய மம்தா, “மக்கள் மனங்களில் பிரிவினைகளை ஏற்படுத்த வேண்டாம்” என்று வலியுறுத்தினார்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!