India
“மதச்சார்பின்மையால் இந்திய கலாச்சாரம் சந்தித்த சவால்?” - யு.பி.எஸ்.சி தேர்வு கேள்வியால் சர்ச்சை!
இந்திய குடிமையியல் பணிகளுக்கு யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி இந்தஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வின் முதல்நிலை தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு கடந்த 20ம் தேதி முதன்மைத்தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வில் மதச்சார்பின்மை குறித்து கேட்கப்பட்ட கேள்வி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், “மதச்சார்பின்மையினால் நமது கலாச்சார நடைமுறைகளுக்கு என்னென்ன சவால்கள் ஏற்பட்டுள்ளது'' என கேட்கப்பட்டுள்ளது.
இந்தக் கேள்வி மதச்சார்பின்மைக்கு எதிராகப் பேசும் விதமாக உள்ளது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அவ்வாறு இருக்கையில், மதச்சார்பின்மை எப்படி சவாலாக இருக்கும் என பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகின்றனர்.
முன்னதாக சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் தலித்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!