India
“உற்பத்தித் துறைகள் மட்டுமல்ல; வங்கிகளும் வீழ்ச்சியடையும்” : பா.ஜ.க அரசை எச்சரிக்கும் ஆய்வு நிறுவனம்!
உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது; ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உற்பத்தி முடக்கப்பட்டு, மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையே வங்கிகளும் தள்ளாடும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளது ஒரு பொருளாதார ஆய்வு நிறுவனம்.
பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், நாட்டின் பல்வேறு துறைகளும் சரிவைச் சந்தித்து வருகின்றன. தவறான பொருளாதாரக் கொள்கைகளால் உற்பத்தித் துறைகளை சீர்குலைத்துள்ளது பா.ஜ.க அரசு.
இந்நிலையில், அமெரிக்காவில் தொடங்கி, பல நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள ‘மூடிஸ்’ என்கிற ஆய்வு நிறுவனம், பல்வேறு நாடுகளின் பொருளாதார நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார நிலை குறித்துத் தெரிவித்துள்ளதாவது,
இந்தியாவின் பல துறைகளில் உற்பத்தி குறைந்து வருகிறது. இந்த நிலை அடுத்த ஓராண்டில் இன்னும் மோசமடையும். இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும். ஆட்குறைப்பு, உற்பத்தி, வங்கி நிதி உள்ளிட்ட எல்லாவற்றையும் பாதிக்கச் செய்யும். இறுதியில் கடும் பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும்.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நலிவு நிலை, விரைவில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தத் தொடங்கும். இதைத் தொடர்ந்து, வங்கி சாராத நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும்.
இதனால், வங்கிகள் வாராக்கடனால் தத்தளிக்கும். ஏற்கனவே, சில வங்கிகள் வாராக்கடனில் தத்தளித்து அரசு உதவியால் மீண்டு வருமா என கேள்விக்குறி நிலவும் சூழலில் மேலும் சில வங்கிகளும் வீழ்ச்சியடையும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்த நிலையைப் போக்க தகுந்த பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என எச்சரித்துள்ளது அந்த ஆய்வறிக்கை.
Also Read
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !