India
'ஒரு நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
17வது மக்களவை முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கிறது. பாஜக தலைமையிலான அரசு 2வது முறை பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டம் இது.
இந்த நிலையில், வருகிற ஜூன் 19ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ’ஒரு நாடு ஒரே தேர்தல்’ என்பதை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
இதற்காக நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ஒரு நாடு ஒரே தேர்தல் மட்டுமில்லாமல், நாட்டின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை நாடுமுழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடுவது குறித்தும், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை ஆலோசிக்க அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம் கூடவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!