India
'ஒரு நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
17வது மக்களவை முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கிறது. பாஜக தலைமையிலான அரசு 2வது முறை பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டம் இது.
இந்த நிலையில், வருகிற ஜூன் 19ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ’ஒரு நாடு ஒரே தேர்தல்’ என்பதை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
இதற்காக நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ஒரு நாடு ஒரே தேர்தல் மட்டுமில்லாமல், நாட்டின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை நாடுமுழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடுவது குறித்தும், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை ஆலோசிக்க அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம் கூடவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !