India
முடிவுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்!
17வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி மற்றும் விவரங்களை மார்ச் 10ம் தேதி அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதில், ஏப்.,11 முதல் மே 19 வரை நாடுமுழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்தது. அது மட்டுமில்லாமல் அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டன.
இதனையடுத்து, அரசு சார்ந்த நலத்திட்டங்களை செயல்படுத்துவது, அரசு விழாக்களுக்கு தடை, ஊழியர்கள் இடமாற்றம் என அரசு ரீதியாக எந்த பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மே 23ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. எனவே, மார்ச் 10ம் தேதி முதல் 76 நாட்களுக்கு நாடு முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றுடன் (மே 26) விலக்கிக்கொள்ளப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Also Read
-
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் : தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுத்த நடராஜன் !
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!