India
முடிவுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்!
17வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி மற்றும் விவரங்களை மார்ச் 10ம் தேதி அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதில், ஏப்.,11 முதல் மே 19 வரை நாடுமுழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்தது. அது மட்டுமில்லாமல் அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டன.
இதனையடுத்து, அரசு சார்ந்த நலத்திட்டங்களை செயல்படுத்துவது, அரசு விழாக்களுக்கு தடை, ஊழியர்கள் இடமாற்றம் என அரசு ரீதியாக எந்த பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மே 23ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. எனவே, மார்ச் 10ம் தேதி முதல் 76 நாட்களுக்கு நாடு முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றுடன் (மே 26) விலக்கிக்கொள்ளப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!