DMK Government
'கோயில்களில் முப்பொழுதும் அன்னதானம்' - அசத்தலான திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருச்செந்தூர் - சமயபுரம் - திருத்தணிகை ஆகிய கோயில்களில் முப்பொழுதும் அன்னதானத் திட்டத்தினை காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாட்டின் கீழ் திருச்சி சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணிகை ஆகிய கோயில்களில் முப்பொழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணிகை ஆகிய மூன்று கோயில்களிலும் முழுநேர அன்னதான திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார்.
இதனைத்தொடர்ந்து கோயில் மண்டபங்களில் தலைவாழை இலை போட்டு ஜாங்கிரி, சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொறியல், வடை, பாயாசம், தண்ணீர் பாட்டிலுடன் பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
மேலும் தற்போது கொரோனா காலமாக இருப்பதால், சாப்பிட வரும் பக்தர்கள் அனைவருக்கும் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, முக கவசங்கள் வழங்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் அமர வைத்து உணவு பரிமாறப்பட்டது.
இன்று முதல் வரும் நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை பக்தர்கள் பசிபோக்க உணவு வழங்கப்படுகிறது. இதற்காக பணியாளர்கள் சுழற்சி முறையில் உணவு தயாரித்து விநியோகிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!