DMK Government
“வாக்காளர்களுக்கு ஆன்லைனில் பணப் பரிமாற்றம்” - அ.தி.மு.க அமைச்சரின் எகிடுதகிடு தேர்தல் முறைகேடு!
தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனது ஆதரவாளர்கள் மூலம் தொகுதியில் இருக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் செல்போன் மூலம் ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க அமைச்சர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்காளர்களின் செல்போன் எண்களுக்கு ஆன்லைன் மூலமாக பணம் செலுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அந்த தொகுதியில் இருக்கும் அனைத்து வாக்காளர்களின் செல்போன் எண்களுக்கும் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்வதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இணை தலைமைத் தேர்தல் அலுவலர் ஆனந்திடம் தி.மு.க சார்பில் விளக்கமான புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணில் இருந்து தனிநபர்களுக்கு பணப்பட்டுவாடா ஆன்லைனில் நடைபெறுகிறதா என்பது குறித்து முழுமையாக கண்காணிக்கிறோம் என தேர்தல் அதிகாரி உத்தரவாதம் அளித்துள்ளார்.
ஏற்கனவே அனைத்து வங்கிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, இதுபோன்று பல்வேறு எண்களுக்கு குறிப்பிட்ட எண்ணிலிருந்து ஆன்லைன் பரிமாற்றம் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க அமைச்சர் விஜயபாஸ்கர், தான் செய்யும் தேர்தல் பிரச்சாரத்தை அலுவலக இணையதளத்தில் இன்று வரை பதிவிட்டு வருகிறார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. அதை தடுக்க வேண்டும் எனவும் தி.மு.க சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!