DMK Government
“தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெறும்; மு.க.ஸ்டாலின் முதல்வராவார்” - TimesNow கருத்துக்கணிப்பில் தகவல்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன.
தி.மு.க தலைமையிலான மெகா கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட முடிவடைந்து, பிரச்சாரத் திட்டங்கள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக் கணிப்பின்படி, தி.மு.க கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அ.தி.மு.க கூட்டணி 65 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தி.மு.க கூட்டணி 43.2% வாக்குகளைக் கைப்பற்றும் எனவும், அ.தி.மு.க கூட்டணி 32.1% வாக்குகளைக் கைப்பற்றும் என்றும் டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏபிபி-சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பிலும் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பத்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக மக்களிடையே வெகுவான அதிருப்தி நிலவுவதாலும், கட்சியையும் ஆட்சியையும் பா.ஜ.க-விடம் அடகு வைத்துச் செயல்படுவதாலும் அ.தி.மு.க படுதோல்வியடைந்து, தி.மு.க 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும் என அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
5 பத்திரியாளர்களை கொலை செய்த இஸ்ரேல்... மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய கொடூரம் !
-
அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் திருப்பூர்... பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்: திருப்பூர் MP கடிதம்
-
நீலக்கொடி சான்றிதழ் பெற அழகுபடுத்தப்படும் தமிழ்நாட்டின் 6 கடற்கரைகள்: ரூ.24 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!
-
“இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! ஜனநாயகம் தழைக்கும்!”: பீகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
-
வாக்கு திருட்டு - பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!