Election 2024
அமித்ஷா கூட்டத்தில் காலியாக இருந்த நாற்காலிகள்... கோஷமிட்டு இடத்தை காலி செய்த பாஜகவினர்... வீடியோ வைரல்!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இதுவரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதுவரை நடைபெற்ற வாக்குபதிவில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது மீதமிருக்கும் தொகுதிகளுக்கு தேர்தல் பிரசாரத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
வரும் 25-ம் தேதி 6-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று டெல்லியின் சங்கம் விகார் பகுதியில் பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையேற்று உரையாற்றினார்.
ஆனால் அங்கே மக்கள்கூட்டம் இல்லாமல் நாற்காலிகள் அனைத்தும் காலியாக இருந்தது. ஆட்கள் சேராமல் இருந்த கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார். பின்னர் தனது உரையை விரைவாக முடிந்து அங்கிருந்து சென்றுவிட்டார். அமித்ஷா கூட்டத்தில் காலியாக இருந்த நாற்காலிகள் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரது கருத்துகளையும் பெற்று வருகிறது.
Also Read
-
சிவகங்கை மாவட்டம் : 8,301 பயனாளிகளுக்கு ரூ.88.37 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்!
-
”பாஜகவும், அடிமைக் கூட்டமும் செய்திடும் SIR சூழ்ச்சியை முறியடிப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!
-
CSK அணியின் அடுத்த கேப்டன் யார் ? அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட அணி நிர்வாகம் !
-
”எதிர்க்கட்சிகளுக்கு முதலீடுகள் மூலம் பதிலடி கொடுப்போம்” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா !
-
நமக்காக உழைக்கும் தூய்மை பணியாளர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் இதுதான் - முதலமைச்சர் கூறியது என்ன ?