Cinema
பிரம்மாஸ்திரா 2 படத்தில் KGF கதாநாயகனா? - இயக்குநர் கூறிய அதிர்ச்சி பதிலால் ரசிகர்கள் கவலை !
KGF 1, 2 கதாநாயகனான யாஷ், பிரம்மாஸ்திரா 2 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவருக்கும் பிரபல நடிகை ஆலியா பட்டிற்கும் சமீபத்தில் திருமணமானது. இவர்களது திருமணத்திற்கு பிறகு வெளியான திரைப்படம் தான் 'பிரம்மாஸ்திரா'.
ஆன்மீக கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் அமிதாப்பச்சன், நாகார்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், வசூலையும் ஈட்டியது.
இந்த நிலையில் பிரம்மாஸ்ரா திரைப்படத்தின் 2-ம் பாகம் எடுக்கப்போவதாக படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், அதில், kgf கதாநாயகன் யஷ்ஷை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக யஷ்க்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து பிரம்மாஸ்ரா பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மறுத்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், தாங்கள் எந்தவொரு கதயநாயகயும் இதுவரை அணுகவில்லை என்றும், இது குப்பை என்றும் கூறியுள்ளார்.
இவரது பதில் தற்போது யஷின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக இந்த படத்திற்கு பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை தேவ் கதாபாத்தித்தில் நடிக்கவைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 3 பகுதியாக வெளியாகும் பிரம்மாஸ்ரா படம், அடுத்தாண்டு 2-ம் பாகமும், அதற்கு அடுத்தாண்டு 3-ம் பாகமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?