Cinema
KGF-2 படத்தால் நின்றுபோன புஷ்பா-2 பட ஷூட்டிங்.. இயக்குநரின் செயலால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!
யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கே.ஜி.எஃப் - 2 படம் உலகளவில் 900 கோடி ரூபாய்க்கு வசூலித்து மற்ற இந்திய படங்களின் சாதனைகளை முறியடித்து வருகிறது.
இதனால் இந்திய சினிமாக்களின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை KGF-2க்கு முன் பின் என பிரித்து பார்க்கும் அளவுக்கு அனைவரையும் KGF - 2 மலைத்துப்போகச் செய்திருக்கிறது.
அந்த வகையில், அல்லு அர்ஜூன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் இந்தியில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.
ஆனால் யாஷின் கேஜிஎஃப்-2 இந்தியில் 300 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. மேலும் கேஜிஎஃப்-2 பார்த்த புஷ்பா பட இயக்குநர் சுகுமார் முக்கியமான முடிவொன்றை எடுத்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கேஜிஎஃப்-2 படத்தில் அனைத்து காட்சிகளையும் அசாத்தியப்படுத்தியிருந்ததால் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை மற்றும் காட்சியமைப்பை மெருகேற்றுவதற்காக புஷ்பா - 2 படத்தின் படபிடிப்பை இயக்குநர் சுகுமார் நிறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பிறகு படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும், படத்தின் பட்ஜெட்டையும் உயர்த்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read
-
நீட் வினாதாள் கசிவு - ”23 லட்சம் மாணவர்களின் கனவுகளை சிதைத்த மோடி அரசு" : ராகுல் காந்தி MP தாக்கு!
-
+2 தேர்வு முடிவுகள் : “குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
சாதிய வன்கொடுமைக்கு சாட்டையடி : +2 தேர்வில் நாங்குநேரி மாணவர் சாதனை!
-
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் கவனத்துக்கு: இ-பாஸ் விவரத்தை வெளியிட்ட தமிழ்நாடு அரசு !
-
குஜராத்தில் மோடி போட்டியிடுவாரா? : விடையற்று போன பா.ஜ.க!