Cinema
KGF-2 படத்தால் நின்றுபோன புஷ்பா-2 பட ஷூட்டிங்.. இயக்குநரின் செயலால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!
யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கே.ஜி.எஃப் - 2 படம் உலகளவில் 900 கோடி ரூபாய்க்கு வசூலித்து மற்ற இந்திய படங்களின் சாதனைகளை முறியடித்து வருகிறது.
இதனால் இந்திய சினிமாக்களின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை KGF-2க்கு முன் பின் என பிரித்து பார்க்கும் அளவுக்கு அனைவரையும் KGF - 2 மலைத்துப்போகச் செய்திருக்கிறது.
அந்த வகையில், அல்லு அர்ஜூன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் இந்தியில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.
ஆனால் யாஷின் கேஜிஎஃப்-2 இந்தியில் 300 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. மேலும் கேஜிஎஃப்-2 பார்த்த புஷ்பா பட இயக்குநர் சுகுமார் முக்கியமான முடிவொன்றை எடுத்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கேஜிஎஃப்-2 படத்தில் அனைத்து காட்சிகளையும் அசாத்தியப்படுத்தியிருந்ததால் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை மற்றும் காட்சியமைப்பை மெருகேற்றுவதற்காக புஷ்பா - 2 படத்தின் படபிடிப்பை இயக்குநர் சுகுமார் நிறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பிறகு படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும், படத்தின் பட்ஜெட்டையும் உயர்த்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!