Cinema
KGF-2 படத்தால் நின்றுபோன புஷ்பா-2 பட ஷூட்டிங்.. இயக்குநரின் செயலால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!
யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கே.ஜி.எஃப் - 2 படம் உலகளவில் 900 கோடி ரூபாய்க்கு வசூலித்து மற்ற இந்திய படங்களின் சாதனைகளை முறியடித்து வருகிறது.
இதனால் இந்திய சினிமாக்களின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை KGF-2க்கு முன் பின் என பிரித்து பார்க்கும் அளவுக்கு அனைவரையும் KGF - 2 மலைத்துப்போகச் செய்திருக்கிறது.
அந்த வகையில், அல்லு அர்ஜூன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் இந்தியில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.
ஆனால் யாஷின் கேஜிஎஃப்-2 இந்தியில் 300 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. மேலும் கேஜிஎஃப்-2 பார்த்த புஷ்பா பட இயக்குநர் சுகுமார் முக்கியமான முடிவொன்றை எடுத்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கேஜிஎஃப்-2 படத்தில் அனைத்து காட்சிகளையும் அசாத்தியப்படுத்தியிருந்ததால் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை மற்றும் காட்சியமைப்பை மெருகேற்றுவதற்காக புஷ்பா - 2 படத்தின் படபிடிப்பை இயக்குநர் சுகுமார் நிறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பிறகு படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும், படத்தின் பட்ஜெட்டையும் உயர்த்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!