Cinema
பிரபல நடிகை வீட்டில் ரூ.2.4 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் திருட்டு.. திரையுலகில் கடும் அதிர்ச்சி!
நடிகை சோனம் கபூர் வீட்டில் ரூ. 2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர். பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளான இவர் நடிகர் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான ‘ராஞ்சனா’ படத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.
சோனம் கபூர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆனந்த் அஹுஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வந்த சோனம் கபூர், தற்போது கர்ப்பமாக இருப்பதால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை சோனம் கபூர் வீட்டில் ரூ. 2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள சோனம் கபூரின் வீட்டில் திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நடிகை சோனம் கபூரின் மாமியார் அம்ரிதா இதுதொடர்பாக டெல்லியில் உள்ள துக்ளக் ரோடு போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில், கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி தனது வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை சரிபார்த்ததாகவும், அப்போது பணம் மற்றும் ரூ.1.14 கோடி மதிப்பிலான நகைகள் திருடுபோனது தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சோனம் கபூர் வீட்டில் வேலை பார்க்கும் டிரைவர்கள், தோட்டக்காரர், சமையல்காரர் என சுமார் 30 பேரிடம் போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!