Cinema
மீண்டும் அமைகிறதா கோலிவுட்டின் மெகா ஹிட் கூட்டணி? குஷியான ரஜினி ரசிகர்கள்!
அண்ணாத்த பட ஷுட்டிங்கின் போதே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற வித்தியாசமான கதையமைப்பில் படம் எடுத்த தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பல வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார்தான் தன்னுடைய அடுத்த படத்திற்கான தேர்வாக ரஜினிகாந்த் வைத்துள்ளார் என அண்மைக்கால தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, ஐந்து இளம் இயக்குநர்கள் ரஜினியிடம் ஒன்லைன் கூறியிருப்பதாகவும் அது ரஜினிக்கு பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் தன்னுடைய பார்வையை கே.எஸ்.ரவிக்குமாரிடம் திருப்பியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இதற்காக கே.எஸ்.ரவிக்குமாரிடம் நல்ல கதையாக தயார் செய்யும்படி ரஜினி கூறியிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகின்றன. இதுபோக, அந்த கதை பாதியில் நின்றுபோன ரானாவாகக் கூட இருக்கலாம் எனவும் கிசுக்கிசுக்கப்படுகின்றன.
இந்த தகவலை அறிந்த சினிமா ரசிகர்கள் முத்து, படையப்பா, லிங்காவை தொடர்ந்து ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மீண்டும் படம் அமைந்தால் கட்டாயம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று தீர்க்கமாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!