Cinema
மீண்டும் அமைகிறதா கோலிவுட்டின் மெகா ஹிட் கூட்டணி? குஷியான ரஜினி ரசிகர்கள்!
அண்ணாத்த பட ஷுட்டிங்கின் போதே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற வித்தியாசமான கதையமைப்பில் படம் எடுத்த தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பல வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார்தான் தன்னுடைய அடுத்த படத்திற்கான தேர்வாக ரஜினிகாந்த் வைத்துள்ளார் என அண்மைக்கால தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, ஐந்து இளம் இயக்குநர்கள் ரஜினியிடம் ஒன்லைன் கூறியிருப்பதாகவும் அது ரஜினிக்கு பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் தன்னுடைய பார்வையை கே.எஸ்.ரவிக்குமாரிடம் திருப்பியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இதற்காக கே.எஸ்.ரவிக்குமாரிடம் நல்ல கதையாக தயார் செய்யும்படி ரஜினி கூறியிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகின்றன. இதுபோக, அந்த கதை பாதியில் நின்றுபோன ரானாவாகக் கூட இருக்கலாம் எனவும் கிசுக்கிசுக்கப்படுகின்றன.
இந்த தகவலை அறிந்த சினிமா ரசிகர்கள் முத்து, படையப்பா, லிங்காவை தொடர்ந்து ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மீண்டும் படம் அமைந்தால் கட்டாயம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று தீர்க்கமாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!