Cinema
நடிகை பூனம் பாண்டேவை அடித்து சித்திரவதை செய்த கணவர்... கைது செய்த போலிஸ் : நடந்தது என்ன?
பிரபல பாலிவுட் நடிகையான பூணம் பாண்டே, சாம் பாம்பே என்பவரைக் காதலித்து 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் மும்பையில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் திடீரென பூனம் பாண்டேவுக்கும் அவரது கணவர் சாம் பாம்பேவுக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சண்டையில் பலத்த காயமடைந்த நடிகை பூனம் பாண்டே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இதையடுத்து கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் மும்பை போலிஸார் சாம் பாம்பேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் பூனம் பாண்டேவுக்கும், சாம் பாம்பேவுக்கும் இப்படி சண்டை நடைபெறுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே 2020ஆம் ஆண்டு இதேபோன்று சண்டை ஏற்பட்டுள்ளது.
திருமணம் முடிந்து இருவரும் தேனிலவுக்குச் சென்றபோது சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தன்னை தாக்கியதாகக் காவல் நிலையத்தில் கணவர் மீது பூனம் பாண்டே புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் அவரை கைது செய்து பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவித்தனர்.
இதையடுத்து கணவரிடமிருந்து பிரிவதாக பூனம் பாண்டே கூறினார். ஆனால் சில நாட்களிலேயே இருவரும் இணைந்துவிட்டனர். இந்நிலையில் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் IPL-ல் விளையாடுவார் - CSK பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கருத்து !
-
”பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் நரேந்திர மோடி” : ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி ஆவேச பேச்சு!
-
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபருக்கு ரூ.1 லட்சம் ஓய்வு ஊதியம் : பெரியார் பல்கலை. உத்தரவால் சர்ச்சை!
-
வட இந்தியர் vs தென் இந்தியர்: தோல்வி பயத்தில் மக்களிடையே பிரிவினையை விதைக்கும் மோடி... வலுக்கும் கண்டனம்!
-
”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து வகையிலும் கவனம் பெறும் தமிழ்நாடு” : முரசொலி!