Cinema
”அவருக்கு கொடுத்த வாக்கை இனி ஆண்டுதோறும் நிறைவேற்றுவேன்” - மறைந்த நடிகர் விவேக் பற்றி ஆர்யா பேட்டி!
அப்துல் கலாம் மற்றும் நடிகர் விவேக் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மரம் நடும் பணியை மேற்கொள்ள உள்ளேன் என நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ஆர்யா தனது அகில இந்திய ஆர்யா ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, தனது ரசிகர் மன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆர்யா, மறைந்த நடிகர் விவேக், ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நடுவது வழக்கமாக வைத்திருந்ததார். அதற்காக என்னிடமும் மரக்கன்று நடுவதற்காக அழைப்பு விடுத்திருந்தார்.
நடிகர் விவேக் இருக்கும்போது அவருக்கு மரக்கன்றுகளை நடுவேன் என்று உறுதி அளிக்கிறேன். ஆனால் தற்போது அவர் இல்லாதது வருத்தமளிக்கிறது. இனி ஆண்டுதோறும் மரக்கன்றுகளை நடும் பணியினை மேற்கொள்ளவுள்ள உள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!