Cinema
”அவருக்கு கொடுத்த வாக்கை இனி ஆண்டுதோறும் நிறைவேற்றுவேன்” - மறைந்த நடிகர் விவேக் பற்றி ஆர்யா பேட்டி!
அப்துல் கலாம் மற்றும் நடிகர் விவேக் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மரம் நடும் பணியை மேற்கொள்ள உள்ளேன் என நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ஆர்யா தனது அகில இந்திய ஆர்யா ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, தனது ரசிகர் மன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆர்யா, மறைந்த நடிகர் விவேக், ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நடுவது வழக்கமாக வைத்திருந்ததார். அதற்காக என்னிடமும் மரக்கன்று நடுவதற்காக அழைப்பு விடுத்திருந்தார்.
நடிகர் விவேக் இருக்கும்போது அவருக்கு மரக்கன்றுகளை நடுவேன் என்று உறுதி அளிக்கிறேன். ஆனால் தற்போது அவர் இல்லாதது வருத்தமளிக்கிறது. இனி ஆண்டுதோறும் மரக்கன்றுகளை நடும் பணியினை மேற்கொள்ளவுள்ள உள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
கன்னியாகுமரி to சென்னை.. 6 நாட்கள் மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம்... பிரமிக்க வைத்த 2 பெண்கள்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
6வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! ஒரே தொடரில் சாதனை மேல் சாதனை! - முழுவிவரம் உள்ளே