Cinema

“Money heist 5ம் பாகம்.. ஃபைட் சீனை ரீக்ரியேட் செய்த சிறுவர்கள் - OTTக்கு வரவேற்பு” : சினிமா துளிகள் !

மணி ஹெய்ஸ்ட் 5ம் பாகம்!

கொரோனா லாக்டவுன் காரணமாக நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று ரசிகர்களுக்கு ஓடிடி தளங்களுக்குமான நெருக்கம். முன்பு ஓடிடி தளங்களில் படங்களை மட்டும் பார்த்து வந்தவர்கள், மிக அதிகமாக வெப் சீரிஸ்களை பார்க்க துவங்கியது இந்த லாக்டவுன் காலத்தில்தான். அதற்கு ஏற்றது போல பல வெப் சீரிஸ்களில் புதிய சீசன்கள் வெளியானது.

அப்படி பரபரபப்பாக பேசப்பட்ட சீரிஸ்களில் ஒன்று ஸ்பானிஷில் வெப்சீரிஸான மணி `ஹெய்ஸ்ட்'. முதலில் ஸ்பானிஷ் மொழியிலும், ஆங்கில சப்டைட்டிலும் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட்டது. அதன் பின் இன்னும் புது ஆடியன்ஸ் உள்ளே வந்தார்கள். இப்போது தமிழ் உட்பட சில இந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக ஒளிப்பரப்பாகிறது.

இதுவரை நான்கு சீசன்களாக வெளிவந்திருக்கும் இந்த சீரிஸின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். நெட்ஃப்ளிக்ஸில் வெளியான இதன் முதல் இரண்டு சீசன்களில், ப்ரஃபசர் தலைமையிலான குழு, புதிதாக பணத்தை அச்சடித்து, அதை எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதைக் காட்டியது.

அடுத்த இரண்டு சீசன்களில், தங்கத்தை கொள்ளையடிக்க சென்று, கொள்ளை நடந்து கொண்டிருந்த போது நிகழும் ஒரு திருப்பத்துடன் முடிக்கப்பட்டிருந்தது. இப்போது அதன் தொடர்ச்சியாக ஐந்தாம் சீசன் வெளியாக இருக்கிறது. இதில் கூடுதல் தகவல் என்ன வென்றால் ஐந்தாம் சீசன் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. அதில் முதல் பாகம் செப்டம்பர் 3ம் தேதியும், இரண்டாம் பாகம் டிசம்பர் 3ம் தேதியும் வெளியாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பை, வீடியோவாக வெளியிட்டிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.

1970ல் யூரோப்பில் நடந்த காதல் - ராதே ஷ்யாம்!

ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துக்கொண்டிருக்கும் படம்`ராதே ஷ்யாம்'. இதில் பிரபாஸ் உடன் பூஜா ஹெக்டே, ப்ரியதர்ஷி, முரளி ஷர்மா எனப் பலரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். 1970களில் யூரோப்பில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகிக் கொண்டிருக்கிறது இந்தப் படம். இந்தப் படத்தோட டைட்டில் ட்விட்டரில் நேற்றிலிருந்து முழுக்க ட்ரெண்டிங்கிலேயே இருந்தது.

அதற்கான காரணம் என்ன என்றால், இந்தப் படத்தில் ஒரு 30 நிமிடங்கள் கப்பலில் நடக்கும் படியான மாதிரி ஒரு போர்ஷன் இருக்கிறது. அதற்காக ஒரு பெரிய கப்பல் செட் போடப்பட்டு, ஷூட் செய்திருக்கிறார்கள். இது படத்தோட மேஜர் ஹைலைட்டாக இருக்கும் என சொல்லப்படுது.

கூடவே இது பயங்கர எமோஷனலாகவும், க்ராண்டியராகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் எப்படியே வெளியாகிவிட்டது. அதை ட்விட்டரில் பல ரசிகர்களும் எழுதி ட்வீட் செய்திருந்தார்கள். இப்போதைக்கு இந்தப் படம் ஜூலை மாதம் 30ம் தேதி ரிலீஸ் என சொல்லப்படுகிறது. அதற்குள் இப்போது இருக்கும் சூழல் மாறிவிடுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

ஃபைட் சீனை ரீக்ரியேட் செய்த சிறுவர்கள்!

சூஜித் சர்கார் இயக்கத்தில், அமிதாப், டாப்ஸி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து இந்தியில் வெளியான படம் `பிங்க்'. இந்தப் படம் முதலில் தமிழில் அஜித் நடித்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை' என ரீமேக் செய்தார்கள். தமிழில் பெரிய அளவுல வரவேற்பை பெற்றது. அதனால் படத்தை தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வேணு ஸ்ரீராம் இயக்கத்துல `வக்கீல் சாப்' என ரீமேக் செய்தார்கள்.

இந்தி, தமிழ் என இரண்டு மொழிகளிலும் படம் ரொம்ப பேசப்பட்டாலும், தெலுங்கில் பவன் கல்யாணுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படத்தின் நோக்கத்தையே கெடுத்து விட்டர்கள் என பரவலாக சொல்லப்பட்டது. ஆனாலும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு இந்தப் படம் பெரிய கொண்டாட்டமாக இருந்தது. குறிப்பாக படத்துல உள்ள சண்டைக் காட்சிகளுக்கு எல்லாம் தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்.

இப்போது படங்களில் வர்ற சீன்களை, ரீக்ரீயேட் செய்வதை பலரும் செய்துவருகிறார்கள். அப்படி வக்கீல் சாப் படத்தில் வரும் ஒரு ஃபைட் சீனை, நெல்லூரை சேர்ந்த சில சிறுவர்களை வைத்து ரீக்ரியேட் செய்திருக்கிறார்கள். அந்த வீடியோ இப்போது ஃபேஸ்புகில் வைரலாக சுற்றிக் கொண்டிருக்கிறது.

Also Read: “அலட்சியமே முதல் எதிரி... நான் தவறவிட்டதை வேறு யாரும் தவறவிட்டுவிடாதீர்கள்” - அருண்ராஜா காமராஜ் உருக்கம்!