Cinema
நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..!
நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில், கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன் கதாநாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50-50 உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். அழகியல் மற்றும் சரும, தோல் சம்பந்தமான மருத்துவராகவும் பணி புரிந்து வரும் இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை எம்.ஆர்.சி நகரில் வசித்து வந்தார்.
இவர் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடயே கொரோனா குறித்து விழிப்புணர்வு எற்படுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.
இந்த செய்தி கேட்டதும் திரை உலகில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
2026ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.20 அன்று தொடக்கம்! : சபாநாயகர் அப்பாவு தகவல்!
-
திருவண்ணாமலையில் “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025!” : முழு விவரம் உள்ளே!
-
“தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சி தோழர் நல்லகண்ணு ஐயா!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
“தமிழில் ‘வணக்கம்’ சொன்னால் போதுமா?” : ஒன்றிய அரசைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!