Cinema
ரஜினியின் ‘தர்பார்’ படத்தை வெளியிட தடை - உயர்நீதிமன்றம் அதிரடி!
ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘தர்பார்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வருகிற, ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், ரஜினியின் தர்பார் படத்திற்கு தடை விதிக்க கோரி மலேசியாவை சேர்ந்த TMY கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ரஜினிகாந்த் நடித்திருந்த 2.O படத்தின் மலேசிய விநியோக உரிமையை லைகா நிறுவனத்திடம் இருந்து 20 கோடி ரூபாய்க்கு பெற்றதாகவும், படத் தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவிகித வட்டிக்கு கடனாக லைகா நிறுவனத்திற்கு வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது , அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயாக உள்ளது.
ஆகையால், தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை லைகா நிறுவனம் வழங்காவிட்டால் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்து வந்த நீதிபதி ஜெயச்சந்திரன், கடன் பாக்கியில் இருந்து ரூ.4 கோடியே 90 ஆயிரத்தை டெபாசிட் செய்யும் வரை மலேசியாவில் ‘தர்பார்’ படத்தை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டை போன்று வெளிநாட்டிலும் ரஜினிக்கு ரசிகர்கள் பட்டாளாம் ஏராளமாக இருக்கும். ஆகையால் மலேசிய ரசிகர்களை மனதில் வைத்து தயாரிப்பு நிறுவனம் டெபாசிட் பணத்தை செலுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!