Cinema
சொன்னதைச் செய்த இமான் - ‘கண்ணான கண்ணே’ திருமூர்த்தி பாடிய பாடல் வெளியானது (வீடியோ)!
சிறுத்தை சிவா - அஜித் கூட்டணியில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் விஸ்வாசம். படத்தில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தாலும் அப்பா மகள் பாசத்தை குறிக்கும் பாடலாக இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்த ஒன்றாக இருந்தது.
இந்த பாடலை, பார்வை மாற்றுத்திறனாளியாக இருக்கும் திருமூர்த்தி பாடியது சமூக வலைதளங்கள் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பரவின.
இதனையடுத்து, திருமூர்த்தியின் திறமையை பாராட்டி, சினிமாவில் பாட வைப்பதாக இசையமைப்பாளர் டி.இமான் உறுதியளித்திருந்தார். அதன்படி, ஜீவா நடிப்பில் உருவாகும் சீறு படத்தில் தன் இசையமைப்பில் இடம்பெற்றுள்ள செவ்வந்தியே என்ற பாடலை திருமூர்த்தியை பாடவைத்துள்ளார் டி.இமான்.
தற்போது இந்த பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த பாடலை பாடியுள்ள திருமூர்த்திக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த டி.இமானுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது
எந்த இடத்தில் இருந்தாலும் திறமைக்கு என்றுமே மதிப்பு இருக்கும். இதே போல, மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ராணு மோண்டால் என்ற பெண் தன்னுடைய வசீகரிக்கும் குரலால் தற்போது பாலிவுட்டின் பின்னணி பாடகியாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் : காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் MRK உத்தரவு!
-
பெண்ணையாறு - ஒன்றிய அரசு நடுவர் மன்றத்தை உடனே அமைக்க வேண்டும் : அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்!
-
பாஜக அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் GetOutதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை : நிர்மலா சீதாராமனுக்கு குறள் ஒன்றை நினைவூட்டிய முரசொலி!