Cinema
வருவான வரி ஏய்ப்பு : வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம் - விரைவில் கைதாகிறாரா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ?
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இவர் சிங்கம், மெட்ராஸ், பிரியாணி உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இவர் மீது கடந்த 2007-08, 2008-09ம் ஆண்டுக்கான தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்புச் செய்ததாக கூறி வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, எதிர்மனுதாரரின் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக ஞானவேல் ராஜாவை ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்றும் அவர் ஆஜராகவில்லை.
பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பழனிசாயின் புலம்பலை மக்கள் நிராகரிப்பார்கள்; 2026 தேர்தலிலும் படுதோல்விதான் : ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!
-
டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வு செய்யப்பட்ட 476 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
“எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
2,18,000 மெ.டன் கொள்ளளவிலான 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல்! : முழு விவரம் உள்ளே!
-
ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியம் : ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!