Cinema
வருவான வரி ஏய்ப்பு : வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம் - விரைவில் கைதாகிறாரா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ?
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இவர் சிங்கம், மெட்ராஸ், பிரியாணி உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இவர் மீது கடந்த 2007-08, 2008-09ம் ஆண்டுக்கான தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்புச் செய்ததாக கூறி வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, எதிர்மனுதாரரின் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக ஞானவேல் ராஜாவை ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்றும் அவர் ஆஜராகவில்லை.
பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!