Cinema
வருவான வரி ஏய்ப்பு : வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம் - விரைவில் கைதாகிறாரா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ?
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இவர் சிங்கம், மெட்ராஸ், பிரியாணி உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இவர் மீது கடந்த 2007-08, 2008-09ம் ஆண்டுக்கான தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்புச் செய்ததாக கூறி வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, எதிர்மனுதாரரின் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக ஞானவேல் ராஜாவை ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்றும் அவர் ஆஜராகவில்லை.
பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பா.ஜ.க மாவட்டத் தலைவர் கொடுத்த 'டார்ச்சர்': பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!
-
“தொடர்ந்து 9 தோல்விகரமான நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பிப்பதே ஒரு சாதனைதான்!” : கனிமொழி என்.வி.என் சோமு!
-
“மிசா - சிறையில் நான் பட்ட கொடுமைகள்” : #VibeWithMKS - நினைவுகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் சாதனை படைக்கும் தமிழ்நாடு” : அமைச்சர் TRB ராஜா பெருமிதம்!
-
பறவைக் காய்ச்சல் : “பாதி வேக வைத்த இறைச்சியை தவிருங்கள்...” - அமைச்சர் மா.சு. அறிவுறுத்தல்!