Cinema
ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் கதை திருட்டு விவகாரத்தில் மீண்டும் சிக்கிய ‘பிகில்’ - அதிரடி காட்டிய ஐகோர்ட்!
விஜய்யின் ‘பிகில்’ படம் நாளை திரைக்கு வரவிருக்கும் நிலையில், மீண்டும் கதை திருட்டு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அம்ஜத் மீரான் என்ற இயக்குநர், ‘பிரேசில்’ எனும் தலைப்பில் தான் எழுதிய கதையை பயன்படுத்தியே விஜய்யின் பிகில் படம் உருவாகியிருப்பதாகவும், தன் கதையை பயன்படுத்தியதற்காக பட தயாரிப்பு நிறுவனமும், அட்லீயும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், அம்ஜத் தாக்கல் செய்த மனுவில் திருத்தங்கள் உள்ளதால் புதிதாக மனுத்தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு நவ.,5ம் தேதி வழக்கை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு நவம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதால், நாளை ‘பிகில்’ ரிலீஸுக்கு சிக்கல் இல்லை எனக் கூறப்படுகிறது. முன்னதாக, உதவி இயக்குநர் கே.பி.செல்வா ‘பிகில்’ கதை தொடர்பாக வழக்கு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !