Cinema
ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் கதை திருட்டு விவகாரத்தில் மீண்டும் சிக்கிய ‘பிகில்’ - அதிரடி காட்டிய ஐகோர்ட்!
விஜய்யின் ‘பிகில்’ படம் நாளை திரைக்கு வரவிருக்கும் நிலையில், மீண்டும் கதை திருட்டு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அம்ஜத் மீரான் என்ற இயக்குநர், ‘பிரேசில்’ எனும் தலைப்பில் தான் எழுதிய கதையை பயன்படுத்தியே விஜய்யின் பிகில் படம் உருவாகியிருப்பதாகவும், தன் கதையை பயன்படுத்தியதற்காக பட தயாரிப்பு நிறுவனமும், அட்லீயும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், அம்ஜத் தாக்கல் செய்த மனுவில் திருத்தங்கள் உள்ளதால் புதிதாக மனுத்தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு நவ.,5ம் தேதி வழக்கை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு நவம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதால், நாளை ‘பிகில்’ ரிலீஸுக்கு சிக்கல் இல்லை எனக் கூறப்படுகிறது. முன்னதாக, உதவி இயக்குநர் கே.பி.செல்வா ‘பிகில்’ கதை தொடர்பாக வழக்கு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
குதிரை பேரம் : முதலமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்!
-
VB-G RAM G திட்டத்தை அமல்படுத்த த.வெ.க அரசு துடிப்பது ஏன்? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
குதிரை பேரம் ; அத்தனை அசிங்கத்துக்கும் வைகோ ஒப்புதல் வாக்குமூலம் : ஆதாரங்களுடன் உண்மை சொன்ன முரசொலி!
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!