உலகம்

ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி : முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் படுகொலை !

ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஃபாவில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி : முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் படுகொலை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியுள்ளது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், 90 சதவீத காசாவின் பரப்பு இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தாக்குதல் இதுவரை 35 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி : முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் படுகொலை !

இதனிடையே நேற்று முன்தினம் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ் மீது மிகப் பெரிய ஏவுகணை தாக்குதலை ஹமாஸ் அமைப்பு நடத்தியுள்ளது. இதில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஃபாவில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸின் ஏவுகணை தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்கு பின்னர், இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் படுகாயமடைந்த நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதலுக்கு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

banner

Related Stories

Related Stories