உலகம்

தாக்குதலை நிறுத்தாத இஸ்ரேல் : 27 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு... 66 ஆயிரம் பேர் படுகாயம் !

இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 27 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.

தாக்குதலை நிறுத்தாத இஸ்ரேல் : 27 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு... 66 ஆயிரம் பேர் படுகாயம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தாக்குதலை நிறுத்தாத இஸ்ரேல் : 27 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு... 66 ஆயிரம் பேர் படுகாயம் !

இந்த தாக்குதல் இதுவரை 27 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதே போல, இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 66,139 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்கச்செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புப்படையினரை இஸ்ரேல் ராணுவம் தடுத்து நிறுத்துவதாகவும் இதன் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாகவும், பல நூறு பேர் இன்னும் மீட்கப்படாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories