உலகம்

Chat GPT-யின் தாய் நிறுவன CEO அதிரடி பணிநீக்கம் : புதிய CEO-வாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம் !

OPEN AI நிறுவனத்தின் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக 34 வயதான மீரா மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்

Chat GPT-யின் தாய் நிறுவன CEO அதிரடி பணிநீக்கம் : புதிய CEO-வாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதில் இருந்து இணையஉலகம் செயற்கை நுண்ணறிவு குறித்தே பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.

Chat GPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும். இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் Chat GPT-யால் தரமுடியும். அதிலும் கல்வி நிலைய பயன்பாடுகளில் கடிதம் முதல் கட்டுரை வரை அனைத்தையும் இதனால் செய்யமுடியும்.

சுமார் 100 மொழிகளில் Chat GPT மென்பொருள் தற்போது கிடைக்கிறது என்றாலும் ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் இதன் திறன் சிறப்பாக இல்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் கூகிள் போன்ற பல்வேறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு குறித்த ஆய்வில் இறங்கியுள்ளதால் விரையில் அதன் தரம் பெரிய அளவில் உருவாகும் என கூறப்படுகிறது.

Chat GPT-யின் தாய் நிறுவன CEO அதிரடி பணிநீக்கம் : புதிய CEO-வாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம் !

இந்த நிலையில், OPEN AI நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அந்த அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நிர்வாக இயக்குநர்கள் கூட்டத்தில் சாம் ஆல்ட்மேனின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. நிர்வாகக் குழு அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது. அவர் இனியும் ஓபன் ஏஐ நிறுவனத்தை முன்னின்று நடத்தமுடியும் எனத் தோன்றவில்லை. அதனால் அவர் நீக்கப்படுகிறார் . அவருக்கு பதில் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக 34 வயதான மீரா மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

அல்பானியாவை சேர்ந்த மீரா மூர்த்தியின் குடும்பத்தினர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். இவர் முன்னர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் பணிபுரிந்தார். பின்னர் Chat GPT, DALL E உள்பட பல்வேறு தொழில்நுட்பங்கள் உருவாக்கத்திலும் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories