உலகம்

ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் தகர்க்கப்பட்ட அணை.. வெள்ளத்தில் மூழ்கிய நகரம்.. குற்றவாளி யார்?

2014-ம் ஆண்டில் இருந்து ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரீமியா பகுதியில் உள்ள ககோவ்ஸ்கா அணை தகர்க்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் தகர்க்கப்பட்ட அணை.. வெள்ளத்தில் மூழ்கிய நகரம்.. குற்றவாளி யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒரு வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் தகர்க்கப்பட்ட அணை.. வெள்ளத்தில் மூழ்கிய நகரம்.. குற்றவாளி யார்?

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றுள்ளது.

இதற்கு இடையில் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டி உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது. இந்த நிலையில், 2014-ம் ஆண்டில் இருந்து ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரீமியா பகுதியில் உள்ள ககோவ்ஸ்கா அணை தகர்க்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் தகர்க்கப்பட்ட அணை.. வெள்ளத்தில் மூழ்கிய நகரம்.. குற்றவாளி யார்?

இதன் காரணமாக இதற்கு அருகில் உள்ள நோவா ககோவ்கா என்னும் நகரத்துக்குள் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதாகவும், விரைவில் அந்த நகரம் முழுக்க வெள்ளத்தால் நிரம்பி பலர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது உக்ரைனா? ரஷ்யாவா ? என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில், இரு நாடுகளும் மற்றொரு நாடுகளை குறை கூறி வருகிறது. இந்த போரில் மக்கள் மட்டுமே தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில், தற்போது அணைகள் போன்றவையும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories