உலகம்

உணவு பஞ்சத்தை தொடர்ந்து தண்ணீர் பஞ்சம்.. பரிதவிக்கும் பாகிஸ்தான்.. அமைச்சருக்கே நேர்ந்த சோகம் !

உணவு பஞ்சத்தை தொடர்ந்து தண்ணீர் பஞ்சத்தில் பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் சிக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

உணவு பஞ்சத்தை தொடர்ந்து தண்ணீர் பஞ்சம்.. பரிதவிக்கும் பாகிஸ்தான்.. அமைச்சருக்கே நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.

அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

உணவு பஞ்சத்தை தொடர்ந்து தண்ணீர் பஞ்சம்.. பரிதவிக்கும் பாகிஸ்தான்.. அமைச்சருக்கே நேர்ந்த சோகம் !

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைத்த நிலையில் கிட்டத்தட்ட இலங்கைக்கு நேர்ந்த நிலையைதான் தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. போதிய வரி வருவாய் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்றமுடியவில்லை

.பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட காலியானதாக கூறப்பட்ட நிலையில், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தால் ஏற்படும் முதல் பாதிப்பான எரிபொருள் பற்றாக்குறையை பாகிஸ்தான் சந்தித்தது.கராச்சி, லாகூர், பைசலாபாத் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் நீண்டும் வரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உணவு பஞ்சத்தை தொடர்ந்து தண்ணீர் பஞ்சம்.. பரிதவிக்கும் பாகிஸ்தான்.. அமைச்சருக்கே நேர்ந்த சோகம் !

அதன் பின்னர் தற்போது உணவு பஞ்சத்தை தொடர்ந்து தண்ணீர் பஞ்சத்தில் பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் சிக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. பல இடங்களில் தண்ணீர் பிடிக்க மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், இது அரசியல் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரே இந்த தண்ணீர் பஞ்சத்தில் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கராச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, "நான் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர், ஆனால் நானே டேங்கரில் தண்ணீர் வாங்கித்தான் சமாளிக்க வேண்டியிருக்கிறது. கராச்சியில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பிரதமர் வேகம் காட்ட வேண்டும்" என கூறிய வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories