உலகம்

வீழ்ந்த கச்சா எண்ணெய் விலை.. ஏறிய தங்கம் விலை.. இதற்கு காரணம் திவாலான அமெரிக்க வங்கியா? பின்னணி என்ன ?

அமெரிக்க வங்கி வீழ்ச்சியடைந்த நிலையில், திடீரென தங்கம் விலை அதிகரித்து, சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது

வீழ்ந்த கச்சா எண்ணெய் விலை.. ஏறிய தங்கம் விலை.. இதற்கு காரணம் திவாலான அமெரிக்க வங்கியா? பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

1983-ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட சிலிக்கான் வேலி வங்கி, படிப்படியாக வளர்ச்சி கண்டு தற்போது மிகப்பெரிய அமெரிக்க வங்கிகளில் ஒன்றாகவும் நாட்டின் 16-வது பெரிய வங்கியாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு கூட ரூ.17 லட்சம் கோடி வரை சொத்து வைத்து நல்ல நிலையிலேயே திகழ்ந்தது.

ஆனால், அதன்பின்னர் பணவீக்கம் அதிகரித்த நிலையில், பெரிய அளவில் வராகடனில் சிலிக்கான் வங்கி சிக்கிக்கொண்டது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட தனது மொத்த கடன் பத்திரங்களை ரூ.14,000 கோடி நஷ்டத்தில் வேறு வழியின்றி விற்றிருப்பதாக கடந்த வாரம் அறிவித்த நிலையில், அதன் பங்குகள் சுமார் 69% வீழ்ச்சியை சந்தித்தன.

வீழ்ந்த கச்சா எண்ணெய் விலை.. ஏறிய தங்கம் விலை.. இதற்கு காரணம் திவாலான அமெரிக்க வங்கியா? பின்னணி என்ன ?

இது குறித்த தகவல் பரவியதும் பொதுமக்கள் சிலிக்கான் வங்கியில் தாங்கள் வைத்திருந்த டெபாசிட் பணத்தை எடுக்க திரண்டனர். 48 மணி நேரத்தில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.25 லட்சம் கோடி டெபாசிட் பணத்தை நிறுவனங்களும் பொதுமக்களும் வங்கியில் இருந்து எடுத்த நிலையில், தற்போது வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மீண்டும் ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தற்போது சிலிக்கான் வேலி வங்கி திவாலாகியுள்ள நிலையில், அதனை பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிலிக்கான் வேலி வங்கியின் பிரிட்டன் பிரிவை வெறும் 1 பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் 100 ரூபாய் ) எச்.எஸ்.பி.சி வங்கி (HSBC Bank) கையகப்படுத்தியுள்ளது.

வீழ்ந்த கச்சா எண்ணெய் விலை.. ஏறிய தங்கம் விலை.. இதற்கு காரணம் திவாலான அமெரிக்க வங்கியா? பின்னணி என்ன ?

இந்த நிலையில், பர்ஸ்ட் சிட்டிசன்ஸ் என்ற வங்கி, சிலிக்கான் வங்கியின் டெப்பாசிட்கள் மற்றும் கடன்கள் பிரிவை அதன் உண்மையான மதிப்பை விட ஆயிரத்து 650 கோடி டாலர் அளவுக்கு குறைந்த தொகையில் வாங்கியுள்ளது. மேலும், இந்த வங்கிகளின் சரிவு காரணமாக சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பங்குச்சந்தை மற்றும் கச்சா எண்ணெயிலிருந்து எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.

இதன் காரணமாக திடீரென தங்கம் விலை அதிகரித்த நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது . கச்சா எண்ணெய் விலை கடந்த 3 வாரங்களில் பேரலுக்கு 10 டாலர் சரிந்து, 75 டாலராக இருக்கும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories