உலகம்

பிரபலங்களுக்கு பிராப்ளம் தர மஸ்க் முடிவு: இனிமேல் ட்விட்டர் Blue Tickக்கு அனைவருமே இதை செய்ய வேண்டுமாம்!

ட்விட்டரில் ப்ளூ டிக் பெறும் திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரபலங்களுக்கு பிராப்ளம் தர மஸ்க் முடிவு: இனிமேல் ட்விட்டர் Blue Tickக்கு அனைவருமே இதை செய்ய வேண்டுமாம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான மெயில் அனுப்பப்பட்டுள்ளது.

பிரபலங்களுக்கு பிராப்ளம் தர மஸ்க் முடிவு: இனிமேல் ட்விட்டர் Blue Tickக்கு அனைவருமே இதை செய்ய வேண்டுமாம்!

கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்ட நிலையில், எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், நன்றாக சென்றுகொண்டிருந்த ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி நாசம் செய்து வருவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கும் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் தனது முடிவில் எலான் மஸ்க் பின்வாங்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு ஏப்ரல் 1ம் தேதி முதல் ப்ளூ டிக் உள்ளவர்களின் ப்ளூ டிக் நீக்கப்போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் கட்டணம் செலுத்தாமல் ப்ளூ டிக் உள்ளவர்கள் அனைவரது கணக்கில் இருந்தும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ப்ளூ டிக் நீக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories