உலகம்

தென் கொரிய சீரிஸ் பார்த்த சிறுவர்கள்.. மரண தண்டனை வழங்கிய வட கொரியா இராணுவம்? அதிர்ச்சியில் உலகம் !

தென் கொரிய நாடகங்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்த்ததாக கூறி, 2 சிறுவர்களுக்கு வடகொரிய இராணுவம் தூக்கு தண்டனை நிறைவேற்றியதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரிய சீரிஸ் பார்த்த சிறுவர்கள்.. மரண தண்டனை வழங்கிய வட கொரியா இராணுவம்? அதிர்ச்சியில் உலகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலக நாடுகளிலே மிகவும் கவனம் ஈர்த்த நாடு என்றால் அது வட கொரியா தான். ஏனென்றால் அங்கே நடக்கும் நிகழ்வு தான் உலக அரங்கில் வெளியில் தெரிவதில்லை. வட கொரியாவில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊடகத்தை அந்நாட்டு அரசு தனது கடப்பாடுக்குள் வைத்துள்ளது.

மேலும் அந்நாட்டு அரசு சொல்லும் செய்தியை தான் ஊடங்கள் வெளியிட வேண்டும், அதை தான் மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடுகளே உள்ளது. இவ்வளவு ஏன், கொரோனா காலகட்டத்தில், உலக நாடுகள் அனைத்தும், தங்கள் நாட்டில் பரவும் கொரோனா குறித்து செய்திகளில் வெளியிட்ட சமயத்தில் வட கொரியா மட்டும் அது தொடர்பாக எந்த செய்திகளையும் வெளியிடவில்லை.

தென் கொரிய சீரிஸ் பார்த்த சிறுவர்கள்.. மரண தண்டனை வழங்கிய வட கொரியா இராணுவம்? அதிர்ச்சியில் உலகம் !

இப்படி பல கட்டுக்கோப்புகள் விதிக்கப்பட்டிருக்கும் இந்நாட்டில், கடந்த ஆண்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய திரைப்படங்கள், நாடகங்கள், இசை ஆகியவற்றின் வீடியோக்கள், சிடிக்கள் போன்றவற்றை விற்பனை செய்தாலோ, அவற்றைப் பார்த்தாலோ, அவை குற்றமாகக் கருதப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற கடுமையான சட்டத்தை விதித்தார் என்ற தகவல்களும் பரவின.

தென் கொரிய சீரிஸ் பார்த்த சிறுவர்கள்.. மரண தண்டனை வழங்கிய வட கொரியா இராணுவம்? அதிர்ச்சியில் உலகம் !

இந்த நிலையில், வட கொரியாவைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் தென்கொரிய நாடகத்தைப் பார்த்ததாக கூறி வட கொரியா இராணுவம் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு வடகொரியாவின் ரியாங்க்காங் மாகாணத்தில் வைத்து, பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

தென் கொரிய சீரிஸ் பார்த்த சிறுவர்கள்.. மரண தண்டனை வழங்கிய வட கொரியா இராணுவம்? அதிர்ச்சியில் உலகம் !

இது தொடர்பாக அங்குள்ள எந்த செய்தி நிறுவனமும் கடந்த வாரம் வரை செய்திகள் வெளியிடாத நிலையில், தற்போது இது குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணமாக இருக்கிறது. தென் கொரிய நாடகங்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்த்ததாக கூறி, 2 சிறுவர்களுக்கு வடகொரிய இராணுவம் தூக்கு தண்டனை நிறைவேற்றியதாக வெளியான தகவல் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories