உலகம்

அமேசான் காட்டுக்கு தீ வைத்தாரா? - டைட்டானிக் நாயகனை குற்றம் சாட்டும் பிரேசில் அதிபர்.. மறுத்த டிகாப்ரியோ

அமேசானில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு காரணம் டைட்டானிக் திரைப்பட கதாநாயகன் லியானார்டோ டிகாப்ரியோ இருப்பதாகக் கூறிய பிரேசில் அதிபரின் குற்றச்சாட்டுக்கு டிகாப்ரியோ மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமேசான் காட்டுக்கு தீ வைத்தாரா? - டைட்டானிக் நாயகனை குற்றம் சாட்டும் பிரேசில் அதிபர்.. மறுத்த டிகாப்ரியோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கடந்த ஆகஸ்ட் மாதம் அமேசான் காட்டுப்பகுதிகளில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் பல அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் தீயில் கருகி அழிந்தன. இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவின் கார்ப்பரேட் தன்மை தான் காரணம் என அங்குள்ள பழங்குடிகள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், அமேசானில் ஏற்ப்பட்ட காட்டுத்தீக்கு பின்னனியில் ’டைட்டானிக்’ திரைப்பட கதாநாயகன் லியானார்டோ டிகாப்ரியோ இருப்பதாகக் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ குற்றம் சுமத்தியுள்ளார்.

அமேசான் காட்டுக்கு தீ வைத்தாரா? - டைட்டானிக் நாயகனை குற்றம் சாட்டும் பிரேசில் அதிபர்.. மறுத்த டிகாப்ரியோ

அந்நாட்டு மக்களிடையே வானொலியில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றிய அவர், லியானார்டோ டிகாப்ரியோ தான் தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் அமேசான் காடுகளை எரிக்கச் சொல்லி நிதி அளித்தார் என்று குறிப்பிட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் அதிபரின் குற்றச்சாட்டுக்கு லியானார்டோ டிகாப்ரியோ மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''அமேசான் காட்டுத்தீ பிரச்சினை ஏற்பட்டுள்ள நேரத்தில், இயற்கை வளம் மற்றும் கலாசாரத்தையும் பாதுகாக்கப் போராடும் பிரேசில் மக்களை ஆதரிக்கிறேன்.

சூழலியல் அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், அவற்றைப் பாதுகாக்க போராடும் குழுக்களோடு நிற்பதில் பெருமை கொள்கிறேன். அதே நேரத்தில் அமேசான் காடுகளைக் குறிவைப்பவர்களுக்கு எந்த பண உதவியும் செய்வதில்லை.

எதிர்கால நன்மைக்காக அமேசான் காடுகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மக்கள், விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

அமேசான் காடுகளைப் பாதுகாப்பதை விட்டுவிட்டு, மற்றவர்கள் மீது குற்றம்சாட்டுவதிலேயே அதிபர் குறியாக இருக்கிறார் என பிரேசில் சூழலியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

banner

Related Stories

Related Stories