உலகம்

தங்கப் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய இளவேனில் : முறையான வரவேற்பு தராத தமிழக அரசு !

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் இன்று சென்னை திரும்பினார்.

தங்கப் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய இளவேனில் : முறையான வரவேற்பு தராத தமிழக அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தார்.

20 வயதே ஆன தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் கடந்தாண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் தங்கம் வென்றிருந்தார். இந்நிலையில், சீனியர் பிரிவில் பங்கேற்ற முதல் சர்வதேச தொடரிலேயே தங்கம் வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் இளவேனில். இளவேனில் வாலறிவனுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இளவேனில் வாலறிவன் போட்டிகளை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பினார். அப்போது அவரை வரவேற்கத் தமிழக அரசு சார்பாகவோ, ரைபிள் கிளப் சார்பாகவோ யாரும் செல்லாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரை வரவேற்க அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வந்திருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''தங்கப்பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் இதற்கு பிறகு இளம் வீரர்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி'' தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories