வைரல்

ஆசையாக ஆர்டர் செய்த சிக்கன் கிரேவியில் இருந்த செத்துப்போன எலி.. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்!

மும்பையில் ஒரு உணவகத்தில் சிக்கன் கிரேவியில் செத்துப்போன எலி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசையாக ஆர்டர் செய்த சிக்கன் கிரேவியில் இருந்த செத்துப்போன எலி.. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையைச் சேர்ந்த அனுராங் சிங் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாந்த்ரா நகரில் உள்ள ஒரு பஞ்சாபி உணவகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு இவர்கள் மட்டன், சிக்கன் என வகை வகையாக உணவுகளை ஆர்டர் செய்து ஆசையாகச் சாப்பிட்டுள்ளனர்.

அப்போது இவர்களுக்கு சிக்கன் கிரேவி வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்த சிக்கனை தொட்டுபார்தபோது அது சிக்கன் கறிமாதிரி இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த இவர்கள் கிரேவியில் இருந்த கறியை நன்றாக உற்றுப்பார்த்தபோது அது செத்துப்போன எலி என்று தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இது குறித்து உணவகத்தின் மேலாளர் விவியன் ஆல்பர்ட் என்பவரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அவர் சரியாக இவர்களுக்குப் பதில் எதுவும் சொல்ல வில்லை. மேலும் இவர்களுக்கு உடல்நலனும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இவர்கள் மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டனர். பிறகு காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலிஸார் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளர், சமையல்காரர் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த உணவு பிரியர்கள் பலரும் அதிர்ச்சியடைந்து உணவகங்களில் இதுபோன்று நடக்காமல் இருக்க அடிக்கடி உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories