வைரல்

வழுக்கை தலை.. மண மேடையில் அடுத்தடுத்து மண மகளுக்குக் காத்திருந்த 2 அதிர்ச்சி சம்பவங்கள்!

வழுக்கை தலை இருப்பதை மறைத்து திருமணம் செய்ய முயன்ற வாலிபரின் உண்மை தெரிந்ததால் திருமணம் நின்ற சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

வழுக்கை தலை.. மண மேடையில் அடுத்தடுத்து மண மகளுக்குக் காத்திருந்த 2 அதிர்ச்சி சம்பவங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு, பஜவுரா கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி இவர்களது திருமண ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்றது.

இதையடுத்து, குறித்த தேதியில் திருமணம் நடைபெற இருந்தது. உறவினர்கள் பலரும் திருமணத்திற்கு வந்திருந்தனர். அப்போது மணமேடையில் இருந்த மணமகனின் தலையில் வைத்துக் கொள்ளும் படி பூவால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தொப்பி கொடுக்கப்பட்டது.

இதை மணமகன் அணிந்தபோது வழுக்கைத் தலையை மறைப்பதற்காக வைத்திருந்த விக் சற்று நழுவியது. இதனால் அவரது வழுக்கைத் தலை அனைவருக்கும் தெரிவித்து விட்டது. அப்போதுதான் மணமகள் உள்ளிட்ட அவரது குடும்பத்திற்கு மணமகளுக்கு வழுக்கைத் தலை என்ற உண்மை தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகளின் குடும்பத்தினர் மணமேடையிலேயே மணமகனைத் தாக்கியுள்ளனர். மேலும் ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதும் வெளிவந்தது. அடுத்தடுத்து உண்மை வெளிவந்ததால் அதிர்ச்சியடைந்த மணமகள் குடும்பத்தினர் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories