வைரல்

4 கால்களுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை.. மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?

மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு 4 கால்களுடன் குழந்தை பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 கால்களுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை.. மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்திற்குட்பட்ட சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி குஷ்வாஹா. இவர் பிரசவத்திற்காக ஜெயரோகா மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்துள்ளார்.

இதையடுத்து மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது பிறந்த பெண் குழந்தை 4 கால்களுடன் இருந்ததை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டனர். இதையடுத்து அக்குழந்தை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறது.

4 கால்களுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை.. மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?

இப்படி பிறக்கும் குழந்தைகளை இஸ்கியோபகஸ் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது பெண்ணின் வயிற்றில் உள்ள கரு இரண்டு பகுதியாகப் பிரியும் போது உடல் பாகங்களும் இரண்டாகப் பிரியும். இப்படி நடந்தால்தான் குழந்தைகள் இப்படிப் பிறக்க வாய்ப்பு அதிகம். ஆனால் இப்படியான சம்பவங்கள் அதிகம் நடக்காது.

4 கால்களுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை.. மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?

தற்போது பிறந்துள்ள குழந்தை நலமுடன் இருக்கிறது. குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதியில்தான் இரண்டு கால்கள் வளர்ந்துள்ளது. இது செயலற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த 2 கால்களை அகற்றுவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதே மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் ரத்லாமி என்ற பெண்ணுக்கு இரண்டு தலைகள், மூன்று கைகள், இரண்டு கால்களுடன் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories