வைரல்

சீறி வந்த காளை, குழந்தையுடன் வந்த தாயைக் கண்டு பணிந்த காட்சி : மஞ்சுவிரட்டில் நெகிழ்ச்சி - வைரல் வீடியோ!

மஞ்சுவிரட்டின்போது ஆவேசமாக ஓடிய காளை, எதிரே குழந்தையுடன் வந்த தாயைக் கண்டு தாண்டிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

சீறி வந்த காளை, குழந்தையுடன் வந்த தாயைக் கண்டு பணிந்த காட்சி : மஞ்சுவிரட்டில் நெகிழ்ச்சி - வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஜல்லிக்கட்டு போட்டியின் போது நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த சிராவயல் பகுதியில் மஞ்சுவிரட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது.

பொட்டல் காட்டில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைக்கு மஞ்சள் துண்டை கட்டிவிட்டு ஆட்டத்துக்கு அவிழ்த்து விட்டுள்ளனர். அப்போது ஆவேசமாக ஓடிய காளை ஒன்று எதிரே குழந்தையுடன் வந்த பெண்ணைக் கண்டதும் தனது ஆவேசத்தை அடக்கிக்கொண்டு அவர்களை ஏதும் செய்யாமல் தாண்டிச் சென்றது.

இது தொடர்பான காணொளி இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருவதோடு, பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories