வைரல்

‘பெண்ணை சவுக்கால் கொடூரமாக அடிக்கும் பூசாரி’ - வைரலாகும் வீடியோ! 

பேய் ஓட்டுவதாகக் கூறி ஒரு இளம்பெண்ணை கோயில் பூசாரி ஒருவர் சவுக்கால் அடித்துக் கொடுமைப்படுத்தும் வீடியோ வைரலாகி உள்ளது. 

‘பெண்ணை சவுக்கால் கொடூரமாக அடிக்கும் பூசாரி’ - வைரலாகும் வீடியோ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள ஆவானி என்கிற பகுதியில் மாரிகாம்பா என்ற அம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கிறது என்றும், அந்த பேயை ஓட்ட வேண்டும் எனவும் கூறி மல்லிகார்ஜூன் என்ற பூசாரியிடம் அழைத்து வந்துள்ளனர்.

அந்த பெண்ணை உட்கார்ந்த நிலையில் இருக்கும்போது, அறையில் இருந்து வெளியே வரும் அந்த இளம் பூசாரி, அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து சவுக்கால் அடிக்கிறார், அந்த பெண் கதறி அழுது துடிக்கிறார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்த இணையத்தில் பதிவேற்றியுள்ளார், தற்போது வைரலாகி வருகிறது.

கடவுளின் பெயரால் நடக்கும் கொடுமைகளுக்கு எல்லையே இல்லை என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது.

banner

Related Stories

Related Stories