வைரல்

அரையிறுதிக்குச் சென்ற இந்திய அணி : அப்பா தோனி விளையாடும்போது உற்சாகப்படுத்திய மகள் ஸிவா !

இந்திய அணியின் வீரர் தோனியை உற்சாகப்படுத்தி பேசிய ஸிவா தோனியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.

அரையிறுதிக்குச் சென்ற இந்திய அணி : அப்பா தோனி விளையாடும்போது உற்சாகப்படுத்திய மகள் ஸிவா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2019 உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று எட்ஜ்பஸ்டான் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

போட்டியின் போது ஏதேனும் ருசிகர, சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். அதிலும், இந்த முறை தோனியின் மகள் ஸிவா தோனியின் க்யூட் ரியாக்‌ஷன்களும், சுட்டித்தனமான குறும்புகளும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஸிவா தோனிக்கென்று தனி அக்கவுண்டே உள்ளது. அதனை, தோனி ரசிகர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என 10 லட்சத்துக்கும் மேலானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் போது தோனியும், தினேஷ் கார்த்திக்கும் விளையாடிக் கொண்டிருந்தபோது, தோனியின் மகள் ஸிவா, பப்பா... (அப்பா) என்றுச் சொல்லி அவரை உற்சாகப்படுத்தும் விதமாக பேசியிருப்பது 4 லட்சத்து 75 ஆயிரம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிறகு, இந்திய தேசியக் கொடிக்கு முன்பு Go India என்றும் துள்ளிக்குதித்து ஸிவா பேசியிருப்பதும் வைரலாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories