வைரல்

2050-க்குள் 90% மனிதர்கள் மாண்டுபோவார்கள் - பகீர் கிளப்பும் ஆய்வறிக்கை!

பூமியில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் 2050ம் ஆண்டுக்குள் மனித இனம் அழிவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று பீதியை கிளப்பியிருக்கிறது.

2050-க்குள் 90% மனிதர்கள் மாண்டுபோவார்கள் - பகீர் கிளப்பும் ஆய்வறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

2050-க்குள் மனித இனத்தின் 90% அழிந்துவிடும் என அதிர்ச்சி அணுகுண்டை வீசியிருக்கிறார்கள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகள்.

இது வெறும் பயமுறுத்தும் எச்சரிக்கை அல்ல; எச்சரிக்கைக்கான காரணம் அந்தளவுக்கு உண்மையானது. எட்டு பில்லியன் மக்கள் வாழ்ந்துவரும் இவ்வுலகில் ஆண்டுதோறும் புவியின் வெப்பநிலை அதிகரித்து வருவதை அழிவிற்கான ஆதாரமாகக் காட்டுகிறார்கள் அவர்கள்.

2050-க்குள் 90% மனிதர்கள் மாண்டுபோவார்கள் - பகீர் கிளப்பும் ஆய்வறிக்கை!

ஆய்வின்படி, உலகளாவிய வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் உயரும் எனக் கணிக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் நாம் முன்னர் நினைத்ததை விட மிக விரைவாக இருத்தலியல் நெருக்கடியை நோக்கிப் பயணித்து வருகிறோம்.

மும்பை, ஷாங்காய் உள்ளிட்ட நகரங்கள் ஆபத்தில் அதிக உள்ளன. வெப்பநிலையில் 3 டிகிரி செல்சியஸ் உயர்வு உலகெங்கிலும் கடலோரப்பகுதிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். கடல் மட்டம் 0.5 மீட்டர் உயரும்.

3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தால் வங்கதேசம் மற்றும் ஃப்ளோரிடாவின் பெரும்பகுதி நீரில் மூழ்கிவிடும். அதே நேரத்தில், ஷாங்காய், லாகோஸ், மும்பை போன்ற பெரிய கடற்கரை நகரங்களுக்குச் சிதைவை ஏற்படுத்தி பெரும்பாலானோரை தட்பவெப்பநிலை அகதிகளாக நகரத்தை விட்டு ஓடச்செய்யும் என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

2050-க்குள் 90% மனிதர்கள் மாண்டுபோவார்கள் - பகீர் கிளப்பும் ஆய்வறிக்கை!

அதாவது, இப்போது நடைபெறும் இயற்கைச் சுரண்டல் தொடருமேயானால் 2050-ஆம் ஆண்டில் சுமார் 90% மனித இனம் அழிந்துவிடும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இயற்கைச் சுரண்டல், சூழலில் உள்ள பல்லுயிர்த்தன்மையை பாதித்து மனிதர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பருவநிலை மாற்றம் குறித்து பெரும் அச்சத்தை ஐநா-வும் வெளிப்படுத்தியுள்ளது. சூழலியல் குறித்து உலகளாவிய அளவில் நடைபெறும் ஆய்வுகள் அத்தனையும் மனிதர்களின் இருப்பு மிகவிரைவில் கேள்விக்குறியாகும் எனும் வாதத்தை முன்வைக்கின்றன. இது அனைவருக்குமான எச்சரிக்கை.

banner

Related Stories

Related Stories