வைரல்

உலகின் மிக வயதான மனிதர் 123 வயதில் மரணம் !

உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ் நேற்று மரணம் அடைந்தார்.

உலகின் மிக வயதான மனிதர் 123 வயதில் மரணம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ் நேற்று(15.05.2019) மரணம் அடைந்தார். மரணமடைந்த அப்பாஸ் இலியிவ்க்கு 123 வயதாகும்.ரஷியாவின் தன்னாட்சி பிராந்தியமான இங்குஷெத்தியாவில் 1896-ம் ஆண்டு பிறந்தார்.

1917 முதல் 1922 வரை ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய அப்பாஸ் இலியிவ், தனது 45 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று, டிராக்டர் டிரைவரானார். பச்சை காய்கறிகளையும், சுத்தமான பசுவின் பாலையும் தினசரி உணவாக கொண்டு வாழ்ந்து வந்த அப்பாஸ் இலியிவ், நாள் ஒன்றுக்கு சுமார் 11 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்டவர்.

அவருக்கு மது, புகை போன்ற எந்த போதை பழக்கமம் இல்லை என்றும் இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை என்றும் கூறப்படுகிறது. அப்பாஸ் இலியிவுக்கு 8 பிள்ளைகளும், 35 பேரப்பிள்ளைகளும், 34 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories