
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தமிழகத்தில் 'தொங்கு சட்டசபை' உருவாகியுள்ளது. த.வெ.க 108 இடங்களிலும், தி.மு.க 59 தொகுதிகளிலும், அ.தி.மு.க 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன
இந்நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் புதிய அரசு அமைக்கும் விவகாரத்தில் அரசியலமைப்பு சிக்கலையோ, நெருக்கடியையோ ஏற்படுத்த விரும்பவில்லை.உடனடியாக மீண்டும் ஒரு தேர்தல் வருவதையும் விரும்பவில்லை.
தமிழ்நாட்டில் விஜய் ஆட்சியமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது. மகளிர் உரிமைத்தொகை திட்டம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை புதிய அரசு தொடர வேண்டும். திராவிட மாடல் அரசு 90 சதவிகித தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது” என தெரிவித்துள்ளார்.






