
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறகிறது.இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் கழக இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
சேப்பாக்கம் பகுதியில், 115 -ஆவது வட்டம் ஆர்.ஓ.பி. தெரு, உசேன் அலிகான் தெரு, ஹைதர் அலிகான் தெரு, சர்தார் ஜங் மெயின் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்டோவில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது தொகுதி மக்கள் மலர்களை தூவி அன்போடு உதயநிதி ஸ்டாலினை வரவேற்றனர். நீங்கள் மீண்டும் வெற்றி பெறுவிர்கள் என மக்கள் அவருக்கு வாக்குறுதி கொடுத்தனர்.








