தமிழ்நாடு

மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் குறுகிய நாட்களில் சுமார் 100 சட்டமன்ற தொகுதிகளில் முக்கிய பிரபலங்கள் சந்திப்புடன் கூடிய தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை கூட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி பல்வேறு சதிகளை மேற்கொண்டு மத கலவரத்தை ஏற்படுத்தி, பிளவு பார்க்க நினைத்தது. ஆனால் திராவிட மாடல் அரசு அதனை முறியடித்தது.

தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய உரிய நிதியை கொடுக்காமல் மறுத்து வருகிறது. குறிப்பாக கல்விக்கான நிதியை கொடுக்க வேண்டுமென்றால், மறைமுகமாக இந்தியை திணிக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் Entrance, Public Exam வைக்கும் தேசிய கல்வி கொள்கையை ஏற்க வேண்டும்.இதனை ஏற்றால்தான் கல்விக்கான நிதி வழங்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு மிரட்டி வருகிறது.

மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !

பாஜக எப்படி மிரட்டினாலும் 'தமிழ்நாடு என்றும் தலைகுனியாது' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும், கூட்டணியும் உறுதியாக இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டை தொடர்ந்து பாஜக வேட்டையாட முயன்று வருகிறது. இந்த ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் கூட தமிழ்நாட்டுக்கு உருப்படியான மக்கள் நலனுக்கான நிதியும் ஒதுக்காமல் பாஜக வஞ்சித்து வருகிறது. இதற்கு அதிமுகவும் ஒத்து ஊத்தி வருகிறது. இந்த முறை பாஜக தமிழ்நாட்டில் ஒரு சீட் கூட வாங்க கூடாது என்பதில், திமுக தலைமையிலான கூட்டணி முனைப்புக் காட்டி வருகிறது.

அந்த வகையில் திமுக 'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற தலைப்பில் திமுக தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் குறுகிய நாட்களில் சுமார் 100 சட்டமன்ற தொகுதிகளில் முக்கிய பிரபலங்கள் சந்திப்புடன் இந்த பரப்புரை கூட்டமானது சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !

இதுகுறித்து தி.மு.தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-

கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்கள் அறிவித்த படி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திராவிடமாடல் அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலும், ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதன் அடிமைக் கூட்டணி தமிழ்நாட்டிற்கு இழைத்துவரும் துரோகத்தை எடுத்துரைக்கும் வகையிலும் தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரையானது திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்று வருகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை இப்போதே உறுதிசெய்யும் விதமாக தமிழ்நாடு தலைகுனியாது பொதுக் கூட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

24 கழக நட்சத்திரப் பேச்சாளர்களைக் களம் இறக்கி , கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட பரப்புரை இன்றோடு (15.02.26) 97 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் சதத்தை எட்ட இருக்கிறது தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரைக் கூட்டம்.

இந்த 97 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த பரப்புரையில் பேச்சாளர்களாக 6 சட்டமன்ற உறுப்பினர்கள், 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 9000+ க்கும் மேற்பட்ட தொகுதிகளின் முக்கிய பிரபலங்கள், 1,78,000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் இதுவரை கலந்து கொண்டது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும்.

மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் இக்குறுகிய நாட்களில் சுமார் 100 சட்டமன்ற தொகுதிகளில் முக்கிய பிரபலங்கள் சந்திப்புடன் கூடிய பரப்புரை கூட்டமானது சிறப்பாக நடைபெற்றுள்ளது.

97 சட்டமன்றத் தொகுதிகளிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஒரு கட்டுக்கோப்பான கூட்ட நிகழ்வாக நடைபெற்றது பரப்புரைக் கூட்டம். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர். திராவிட மாடல் அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்ததை கண்கூடாகக் காண முடிந்தது.

திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமை பெண், நான் முதல்வன், காலை உணவு திட்டம், தாயுமானவர் திட்டம், அன்புக் கரங்கள் திட்டம் என அத்தனை திட்டங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. பொங்கல் பரிசாக 3000 அறிவித்தது, சட்டமன்ற தேர்தலால் உரிமை தொகை தடைபட்டு விடக் கூடாது என 5000 ரூபாய் மொத்தமாக கொடுத்தது, அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் 2. O ஆட்சியில் மகளிர் உரிமை தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்திருப்பது என அடுத்தடுத்த அறிவிப்புகளால் பொது மக்களுக்கு இன்ப அதிர்ச்சியும், எதிர்க்கட்சியினருக்கு அதிர்ச்சி வைத்தியமும் கொடுத்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

இவற்றை எல்லாம் பரப்புரைக் கூட்டங்களில் கழக சிறப்பு பேச்சாளர்கள் எடுதுக்கூறி பேசும் போது பொது மக்கள் ஆராவாரத்துடன் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர். அதோடு பல்வேறு கவனம் ஈர்க்கும் பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டன.

மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !

அதில் முக்கியமாக பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எதுவும் வழங்காத ஒன்றிய பாஜக அரசையும் அதற்கு துணை போய் துரோகம் செய்யும் அதிமுகவையும் , மக்கள் முன் எடுத்துரைக்கும் வகையில், பொது மக்களுக்கு ‘அல்வா’, ‘முட்டை’ கொடுத்து பிரச்சாரம் செய்தது பொது மக்களின் மத்தியில் கவனம் பெற்றது.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கழகத்தின் புதிய பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடல் பிரச்சாரக் கூட்டங்களில் இசைக்கப்படும் போது கூட்டம் ஆர்ப்பரித்து கொண்டாடியது. ரிங் டோனாகவும், ரீல்ஸ் ஆகவும் நிறைய இளைஞர்கள், பெண்கள் கழகப் பிரச்சார பாடலை வைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பரப்புரை நடைபெறும் ஒவ்வொரு தொகுதியிலும் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு நட்ச்சத்திரப் பேச்சாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கழகத்தின் மூத்த முன்னோடியினர் வீடுகளில் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து அவர்களுடன் உணவருந்தியும், பாராட்டியும் சிறப்பிக்கப்பட்டனர் . இது கழகத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை உண்டாக்கி தலைமை மீதான பிடிப்பை அதிகரிக்கச்செய்துள்ளது.

மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !

காலையில் அடிமட்ட அளவிலான களப்பணி, முக்கிய பிரபலங்களுடனான சந்திப்பு, மாலையில் பரப்புரைக் கூட்டம் என சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ள தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரையானது பொது மக்கள் மற்றும் கழகத்தினரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

97 தொகுதிகளிலும் மக்கள் அணி அணியாய் திரண்டு வந்து எழுச்சியோடு பங்கேற்றனர். பெண்கள், இளைஞர்கள் அதிகளவு திரண்டு வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றர். பரப்புரை தொடங்கிய போது இருந்த ஆதரவை விட இரண்டு மடங்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும் ஒரே தலைவராக முதலமைச்சர் அவர்கள் மட்டுமே உள்ளார், அவரால் மடடுமே நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல முடியும் என மக்கள் திடமாக நம்புகிறார்கள். பொது மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் அரசாக என்றும் இருக்கும் திராவிட மாடல் அரசு.

banner

Related Stories

Related Stories