தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்கள் பட்டியல் போட முடியுமா? : பிரதமர் மோடிக்கு முரசொலி கேள்வி!

தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. ஆட்சி செய்த சிறப்புத் திட்டங்களின் பட்டியலை ஃபைல் போட்டு எடுத்து வைத்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கான 
சிறப்புத் திட்டங்கள் பட்டியல் போட முடியுமா? : பிரதமர் மோடிக்கு முரசொலி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (30-01-2026)

சிறப்புத் திட்டங்கள் பட்டியல் போட முடியுமா?

தமிழ்நாட்டுக்கு வரும்போது பிரதமர் மோடி என்ன செய்திருக்க வேண்டும்? தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. ஆட்சி செய்த சிறப்புத் திட்டங்களின் பட்டியலை ஃபைல் போட்டு எடுத்து வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் என்றால் என்னவென்றே தெரியாது.

ஒன்றிய அரசின் ஆட்சியில் கூட்டணியாக திராவிட முன்னேற்றக் கழகம் இருந்த போது செய்யப்பட்ட சாதனைகள் சில...

•இந்திய அரசு செலவு செய்த திட்டச் செலவில் 11 விழுக்காட்டை தமிழகத்துக்கு கொண்டு வந்தோம்.

•மிக முக்கியமான 69 திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றிக் காட்டினோம்.

•இரண்டாயிரம் ஆண்டு இலக்கியப் பெருமை கொண்ட தமிழ்மொழியை செம்மொழியாக்கும் பெருங்கனவு 100 ஆண்டுகளாக நம் தமிழறிஞர்களுக்கு இருந்தது. செம்மொழித் தகுதியை தமிழுக்குப் பெற்றுத் தந்தோம்.

•செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அமைத்தோம்.

•கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச் செலவில் திட்டப்பணிகள் செய்யப்பட்டன.

•ஒரகடத்தில் 478 கோடி ரூபாய் முதலீட்டில் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்தது.

•1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருக்காலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருக்காலை உருவாக்கம்.

•தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.

•சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.

•120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமார மங்கலம் மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மேம்பாடு.

•1,650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான துவக்கம்.

•2,427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம்.

•நெசவுத் தொழிலுக்கு இருந்த சென்வாட் வரி நீக்கம்.

•908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.

•அடக்குமுறை பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டது.

•தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி.

•1,828 கோடி ரூபாய்ச் செலவில் 98 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.

•சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.

•ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

•திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.

•சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம்.

•திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம்.

•கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப்பெரிய மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் போன்றவை இந்த காலகட்டத்தில் உருவாகின.

•கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா.

- ஆகியவை அனைத்தும் ஒன்றிய அரசின் கூட்டணியில் இடம்பெற்று, தமிழ்நாட்டுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டு வந்த திட்டங்கள் ஆகும். சாதனைகள் ஆகும். தமிழ்நாட்டுக்காகக் கிடைத்த தனிப்பட்ட சிறப்புத் திட்டங்கள் ஆகும்.

தமிழ்நாட்டிற்கான 
சிறப்புத் திட்டங்கள் பட்டியல் போட முடியுமா? : பிரதமர் மோடிக்கு முரசொலி கேள்வி!

அப்படி சிறப்புத் திட்டங்கள் இருந்தால், அதனை பிரதமர் மோடி அவர்கள் சொல்லி இருக்க வேண்டும். இல்லை. அதனால் சொல்லவில்லை.

மதுரையில் பிரமாண்டமான எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்திருந்தால் சொல்லலாம். அதைக் கட்டவில்லை. ஓசூருக்கு விமான நிலைய அனுமதி கொடுத்திருந்தால் சொல்லலாம். அந்த அனுமதி தரவில்லை. மதுரைக்கு மெட்ரோ ரயில் விட அனுமதித்திருந்தால் சொல்லலாம். அந்த அனுமதியும் தரவில்லை. கோவைக்கு மெட்ரோ ரயில் விட அனுமதித்திருந்தால் சொல்லலாம். அந்த அனுமதியும் தரவில்லை. மோடியின் கைவசம் சொல்வதற்கு ஏதுமில்லை. அதனால் அவரால் சொல்ல முடியவில்லை.

தமிழ் செம்மொழியானது. செம்மொழி உயராய்வு நிறுவனம் அமைக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. காவிரி கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. மாநில முதல் அமைச்சர்கள் விடுதலை நாளான ஆகஸ்ட் 15ல் கோட்டையில் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தார். வி.பி.சிங் தலைமையில் நடந்த தேசிய முன்னணி ஆட்சியின் போது முதல்வர் கலைஞரின் வற்புறுத்தலால் மண்டல் கமிஷன் அறிக்கையை அரசு ஏற்று மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. சேது சமுத்திரத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்திய அமைதிப்படை திரும்பப் பெறப்பட்டது. தேசிய சித்தமருத்துவ ஆய்வு மையம் உருவாக்கப்- பட்டது. ... என்று அடுக்கிக் கொண்டே போகிறோம். அப்படி ஏதாவது அடுக்க முடியுமா பா.ஜ.க. ஆட்சியில் இந்த பத்தாண்டுகளாக?

•இந்தி திணிப்பு சமஸ்கிருத திணிப்பு

•தமிழ் புறக்கணிப்பு

•நீட் கொடுமை .

மூன்று வேளாண் சட்டங்களின் மூலமாக விவசாயிகளின் வாழ்க்கை பறிப்பு

•குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலமாக சிறுபான்மையினருக்கு அச்சம்

•மாநில உரிமைகள் பறிப்பு

•நிதி உதவிகள் மறுப்பு

.ஜி.எஸ்.டி. நிதி மறுப்பு

•பேரிடர் கால நிதி தர மறுப்பு - இவைதான் பா.ஜ.க. கால வேதனைகள். இதனைத்தான் பட்டியல் போட முடியும்!

banner

Related Stories

Related Stories