
ஆங்கில புத்தாண்டு மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”30/12/2025 (செவ்வாய்கிழமை, 31/12/2025 (புதன்கிழமை). 01/01/2026 (வியழக்கிழமை ஆங்கில புது வருட பிறப்பு)-யை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்தும் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 30/12/2025 (செவ்வாய்கிழமை) அன்று 240 பேருந்துகளும், 31/12/2025 (புதன்கிழமை) அன்று 255 பேருத்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை. நாகை, வேளாங்கண்ணி ஒரும். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 30/12/2025 மற்றும் 31/12/2025 ஆகிய தேதிகளில் மொத்தம் 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாதாமைத்திலிருந்து 30/12/2025 மற்றும் 31/12/2025 ஆகிய நேதிகளில் மொத்தம் 20 பேருத்துகளும் சிறப்பு பேருத்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
765 மேலும், சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப 03/01/2028 (சனிக்கிழமை) அன்று 525 பேருந்துகளும் மற்றும் 04/01/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பேருந்துகளும் அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திலையில், இந்த வாரத்தில் 30/12/2025 செவ்வாய்கிழமை 11,502 பயணிகளும். 31/12/2025 புதன்கிழமை 8,380 பயணிகளும். 01/01/2026 வியாழக்கிழமை 11.135 பயணிகளும் 02/01/2026 வெள்ளிக்கிழமை 7,501 பயணிகளும் 03/01/2026 சனிக்கிழமை 10794 பயணிகளும் மற்றும் 04/01/2028 ஞாயிறு 19.216 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனவே பயணிகள் மேற்கூறிய வசதியிவை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.






