தமிழ்நாடு

ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.48.81 கோடி செலவிலான 27 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 83 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.10.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 43 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  4 திருக்கோயில்களில் 4 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு உதவி ஆணையர் அலுவலக கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி;

48 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் 7 திருக்கோயில்களில் 13 முடிவுற்ற பணிகள், ஒரு இணை ஆணையர் அலுவலகம், 13 ஆய்வர் அலுவலகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவி பொறியாளர் (மின்), இளநிலை வரைதொழில் அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 83 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

இந்து சமய அறநிலையத்துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருவதோடு, துறையில் அவ்வபோது ஏற்படும் காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. 

4 திருக்கோயில்களில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தல்  

கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்  பெருந்திட்ட வரைவுப் பணிகளின் கீழ் 33.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயிலின் மலைமேல் மற்றும் அடிவாரத்தில் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகளுக்கான கட்டுமானப் பணிகள்;

வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம், அருள்மிகு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில் 4.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயில் திருப்பணிகள்; நாமக்கல் மாவட்டம், குன்னமலை, அருள்மிகு வல்லீஸ்வரர் திருக்கோயிலில் 3.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயில் திருப்பணிகள்; 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரம்பலூரில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி;

ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!

என மொத்தம் 43.20 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். 

7  திருக்கோயில்களில்  13 முடிவுற்ற கட்டுமானப்  பணிகள், ஒரு இணை ஆணையர் அலுவலகம் மற்றும் 13 ஆய்வர் அலுவலகங்களை   திறந்து வைத்தல் 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர். அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 15.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம், சலவைக் கூடம் மற்றும் புனரமைக்கப்பட்ட நாழிக்கிணறு;

ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அருள்மிகு  சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 8.27 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட மலைப்பாதை தார்சாலை மற்றும் புதிய பசுக்கள் காப்பகம், பக்தர்களுக்கான பேருந்து காத்திருப்பு கூடம்; திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில்  10.47 கோடி  ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கோபுரங்கள் மற்றும் விமானங்களை வண்ண விளக்குகளால் ஒளிரூட்டுதல் மற்றும் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம்; 

திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 3.52 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இரண்டு கலைக் கல்லூரிகளில் மொழி ஆய்வுக் கூடங்கள் மற்றும் அருள்மிகு இடும்பன் திருக்கோயில் முடிக் காணிக்கை மண்டபம்; 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் அலுவலகம்; 

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி  திருக்கோயிலின் ஜவுளி ரெங்கசாமி கட்டளை தோப்பில் 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பசுமடம்;  ஈரோடு மாவட்டம், பண்ணாரி, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் 1.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கிரில் அமைப்புடன் கூடிய சுற்றுசுவர்;

உத்திரமேரூர், மதுராந்தகம், வேடசந்தூர், ஆத்தூர், உசிலம்பட்டி, திருத்துறைப்பூண்டி, திருக்குவளை ஆகிய இடங்களில் 1.56 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 13 ஆய்வர் அலுவலகங்கள்; காஞ்சிபுரம் மாவட்டம், திருநீர்மலை, அருள்மிகு ரெங்கநாதப் பெருமாள் திருக்கோயிலில் 1.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு;

என மொத்தம் 48.81 கோடி ரூபாய் செலவிலான 27 முடிவுற்ற பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவி பொறியாளர் (மின்),  இளநிலை வரைதொழில் அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குதல்

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள சமய நிறுவனங்களை நிர்வகித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல், சொத்துகளை பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வரும் அலுவலர் மற்றும் பணியாளர் பணியிடங்களில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன.  

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறையின் பொறியியல் பணியில் உதவி பொறியாளர் (மின்) பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 12 நபர்களுக்கும், பொறியாளர் சார்நிலை பணியில் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 29 நபர்களுக்கும், அமைச்சுப் பணியில் உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 42 நபர்களுக்கும், என மொத்தம் 83 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை  வழங்கினார்.   

banner

Related Stories

Related Stories