பாகிஸ்தானுக்கு எதிரான போரில் மூன்றாவது நாளின் இறுதியில் இந்திய ஆயுதப்படைகள் முதலிடத்தில் இருந்தபோது, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கு அமெரிக்காவின் தலையீடுதான் காரணம் எனும் செய்திகள் உண்மையா என நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர் செல்வகணபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அமெரிக்காவுடன் ஏதேனும் உயர் மட்டக் கூட்டம் நடத்தப்பட்டதா, அப்படியானால், சந்திப்பின் முக்கிய புள்ளிகள் என்ன?
மே 2025 அன்று இந்திய-பாகிஸ்தான் போர்நிறுத்தத்தில் அமெரிக்க அரசாங்கம்/ஜனாதிபதி ஏதேனும் பங்கு வகித்தாரா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?ஒருவேளை இல்லையென்றால், அத்தகைய தவறான வதந்திகள் குறித்து ஒன்றிய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
பாகிஸ்தானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு அமெரிக்கா வர்த்தக வரிச் சலுகைகளை காரணம் காட்டியது என்பது உண்மையா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
மேலும் காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் தரப்பு பரிந்துரைகளுக்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை என்று அமெரிக்காவிடம் தெரிவிக்கப்பட்டதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு குறித்து ஊடகங்களின் ஒழுங்குமுறை மீறல்களின்மீது நடவடிக்கை என்ன?
இந்தியா-பாகிஸ்தான் போரின்போது பல செய்தி தொலைக்காட்சிகள் சரிபார்க்கப்படாத மற்றும் தவறாக வழிநடத்தும் தகவல்களை ஒளிபரப்பி மக்களை குழப்பத்திலும் பதட்டத்திலும் ஆழ்த்தியது. அத்தகைய தொலைக்காட்சிகள் மீது ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தி சேனல்களுக்கான ஒளிபரப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் நிகழ்நேர உண்மை சரிபார்ப்பு வழிமுறைகளை தேசிய பாதுகாப்பு பேரிடர்களின்போது ஒன்றிய அமைச்சகம் ஆய்வுகள் செய்கிறதா?
விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட ஒளிபரப்பாளர்களுக்கு கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1995 இன் கீழ் ஏதேனும் அபராதங்கள் விதிக்கப்பட்டனவா அல்லது கண்டன அறிக்கைகள் வழங்கப்பட்டனவா?
இனி வரும் காலங்களில் இதுபோன்ற சூழ்நிலைகளில் தொலைக்காட்சி உள்ளடக்கத்திற்கான முன் அறிவிப்புகள் வழங்க அரசிடம் உள்ள திட்டங்கள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.