தமிழ்நாடு

சென்னை மாரத்தான் : பங்கேற்பாளர்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு !

ஜனவரி 5-ம் தேதி சிறப்பு மெட்ரோ இரயில் சேவைகள் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மாரத்தான் : பங்கேற்பாளர்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் -  மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு வருகின்ற வரும் ஜனவரி 5-ம் தேதி சிறப்பு மெட்ரோ இரயில் சேவைகள் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பில், "சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Fresh Works Chennai Marathon உடன் இணைந்து, அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயணத்தை வழங்குவதற்காக, மெட்ரோ இரயில் சேவைகள், வருகின்ற 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படும்.

சென்னை மாரத்தான் : பங்கேற்பாளர்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் -  மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு !

மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் QR குறியீடு பதியப்பட்ட சிறப்பு பயணசீட்டை பயன்படுத்தி 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.

வாகன நிறுத்துமிடத்தில் இந்த QR / Bib குறியீட்டை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம். மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் " என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories