சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பதிவிட்ட ஸ்ரீஹரி என்ற இளைஞரை கைது செய்து, தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 04.12.2024ம் தேதி மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், x (Twitter) மற்றும் Instagram ஆகிய சமூக வலைதளங்களிலும், Signal App என்ற செல்போன் செயலியிலும், ஒரு குறிப்பிட்ட நபர் குழுக்களை ஆரம்பித்து அதில் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதாகவும், மேலும் அக்குழுவில் உள்ள மற்ற நபர்களால் மேற்படி ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும், மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டிருந்ததின் பேரில், மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து (West Zone,Cyber Crime Police Station) புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண், இகா.ப அவர்கள் உத்தரவின் பேரில், காவல் கூடுதல் ஆணையாளர் (வடக்கு) அறிவுரையின்படி, மேற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் மேற்பார்வையில், மேற்கு மண்டலம் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் எதிரியின் X (Twitter) ID, Account Creator மற்றும் IPDR விவரங்களை கொண்டு விசாரணை செய்ததில் எதிரி கேரளா மாநிலத்தில் உள்ளது தெரியவந்தது.
அதன்பேரில், கேரளா மாநிலத்தை சேர்ந்த எதிரி ஸ்ரீஹரி, (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி ஶ்ரீஹரி விசாரணைக்குப் பின்னர் இன்று (21.12.2024) சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜர் செய்யப்பட உள்ளார்.